ஜெ., வீட்டு பணியாளர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் விசாரணை கமிஷன் குழப்பம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., வீட்டு பணியாளர்கள்
முன்னுக்கு பின் முரணாக பதில்
விசாரணை கமிஷன் குழப்பம்

ஜெ., வீட்டு பணியாளர்கள், முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவிப்பதால், விசாரணை கமிஷன், குழப்பம் அடைந்துள்ளது.

 ஜெ., வீட்டு, பணியாளர்கள், முன்னுக்கு பின், முரணாக பதில்  விசாரணை, கமிஷன், குழப்பம்


ஜெ., மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது.ஜெ., வீட்டில், 10 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள் பட்டியலை, ஜெ.,விடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம், விசாரணை கமிஷன் கேட்டது. அவர், 31 பெயர்கள் உடைய பட்டியலை, விசாரணை கமிஷனில் ஒப்படைத்தார்.



அவர் கொடுத்தபட்டியலில் இருந்த முகவரி மற்றும் அலைபேசி வழியே, பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, விசாரணை கமிஷன், தனியார் நிறுவன உதவியுடன், புதிய பட்டியலை தேர்வு செய்தது. அதில், 21 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில், ஐந்து பேர் பெயர், பூங்குன்றன் கொடுத்த பட்டியலில் விடுபட்டிருந்தது. அவர்களையும் விசாரணைக்கு அழைக்க, விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது.


ஜெ., வீட்டில் நீண்ட காலமாக, சமையலராக இருந்த ராஜம்மாள், விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவர், முதலில், ஜெ., தாயார் சந்தியா காலத்தில் இருந்து, சமையலராக இருப்பதாக கூறியவர், பின், 30 ஆண்டுகளாக பணியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.'ஜெ., அண்ணன் மகள் தீபாவை சந்தித்ததே இல்லை; அவர், யாரென்றே தெரியாது. போயஸ் கார்டனில் அடியாட்கள் யாரும் கிடையாது' என, ராஜம்மாள் கூறியுள்ளார். அவர் கூறிய பதில்களில் பல, முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளன.

Advertisement


அதேபோல், ஜெ., முகாம் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த கார்த்திகேயனும், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பெரும்பாலும், ஒரே மாதிரி பதில்களை அளித்துள்ளனர்.இது, விசாரணை கமிஷனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அடுத்து வருவோரிடம், வேறு கோணத்தில் விசாரணையை நடத்த, விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
22-பிப்-201806:39:51 IST Report Abuse

Amirthalingam Sinniahஇவருடைய வயதை நோக்கு ம் போது ,அவருடைய பதில் முரணானதாகதான் இருக்கலாம். பொறுமையான விசாரணை தேவை.

Rate this:
மண்புழு - Faraway Land,அன்டார்டிகா
22-பிப்-201806:33:37 IST Report Abuse

மண்புழு யாரோ ட்ரெயின் பண்ணி அனுப்பியிருக்காங்கனு தெரியுது. யாரந்த கருங்காலி? எதற்காக பணியாளர்கள் உண்மையை பேசக்கூடாது என்று நினைக்கிறார்கள்?

Rate this:
Thanu Srinivasan - Chennei,இந்தியா
22-பிப்-201806:32:03 IST Report Abuse

Thanu Srinivasanஇந்த விஜாரணை கமிஷனே ஒரு வேஸ்ட். பதில் சொல்பவர்கள்தான் குழப்படியாக பதில் கூறுகிறார்கள் என்று இல்லை, கமிஷன் தலைவர் கேட்கும் கேள்விகளே அடிப்படை நோக்கத்திற்கு (core issue) சம்பந்தம் இல்லாதவை. ஒரு பெரிய சதி அல்லது குற்றம் நடந்தாக சந்தேகம் எழுந்தால் அதை புலனாய்வுத் துறை போன்ற ஒரு அமைப்பு தானே விசாரிக்க வேண்டும். இதைபோன்ற ஸீரியஸ் ஆன விஷயங்களில் ஓய்வு பெற்ற நீதிபதியால் என்ன சாதித்துவிட முடியும்?

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
22-பிப்-201806:00:42 IST Report Abuse

Rajendra Bupathiஉண்மையை சொன்னா உயிருக்கு ஆபத்துங்க நிலைமை இருக்கும் பொழுது, ஒளறத்தான் செய்வாங்க?

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
22-பிப்-201805:59:36 IST Report Abuse

Rajendra Bupathiபாவம் வயசான காலத்துல ஓவரா மெரட்டுனா அது என்னதான் செய்யும்?

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-பிப்-201805:49:17 IST Report Abuse

D.Ambujavalliஅவரவருக்கு உயிர்பயம் இருக்குமல்லவா ? பத்து நிமிஷம் சாட்சி சொல்லிவிட்டு வெளியே போய்த்தானே ஆகவேண்டும்

Rate this:
chandkec - singapore,சிங்கப்பூர்
22-பிப்-201805:13:54 IST Report Abuse

chandkecமக்களை மேலும் முட்டாளா ஆக்கும் ,மக்கள் பணத்தை veenadikkum Intha விசாரணை யாருக்கு?

Rate this:
skv - Bangalore,இந்தியா
22-பிப்-201804:25:13 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>மிரட்டப்பட்டிருக்கலாமே எல்லோரும் அவ்ளோ பிராடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
22-பிப்-201802:46:40 IST Report Abuse

விருமாண்டிவிசாரணை முடிவதற்குள் சசி தண்டனை காலம் முடிவுக்கு வந்துடும்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement