சசி குடும்பத்தினரின் வெளிநாட்டு முதலீடுகளை வரித்துறை தோண்டுகிறது Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
Sasikala,Jayalalitha, income tax, சசிகலா குடும்பம், வருமான வரித்துறை, போலி நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீடு , மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மிடாஸ் மதுபான ஆலை, ஜெயா டிவி ,நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ,Sasikala family, income tax department, fake companies, foreign investment, late Chief Minister Jayalalithaa, Midas alcohol factory, Jaya TV, namathu MGR newspaper,

சசிகலா குடும்பத்தினரின், தமிழக சொத்து களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வரும்,வருமான வரித்துறை,அவர்கள் நடத்திய போலி நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு கள் குறித்தும், விசாரணையை துவக்கியுள்ளது.

Sasikala,Jayalalitha, income tax, சசிகலா குடும்பம், வருமான வரித்துறை, போலி நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீடு , மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மிடாஸ் மதுபான ஆலை, ஜெயா டிவி ,நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ,Sasikala family, income tax department, fake companies, foreign investment, late Chief Minister Jayalalithaa, Midas alcohol factory, Jaya TV, namathu MGR newspaper,


இது தொடர்பாக, அமலாக்கத் துறையும், விரைவில் களத்தில் இறங்குகிறது. அதனால், சசி உறவுகளுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் நிழலாக, 25 ஆண்டுகளாக வாழ்ந்த சசிகலா மற்றும் அவர்களது உறவினர்கள், தமிழகத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து களை வாங்கி குவித்துள்ளனர்.


இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், சசிகலா, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, சென்னையில், 117

இடங்கள் உட்பட,தமிழகத்தில், 215 இடங்களில், 2017 நவம்பரில், ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.


மதுபான ஆலை:மேலும், ஜெயா, 'டிவி' மற்றும், 'நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழ் அலுவலகம்; காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் உள்ள, 'மிடாஸ்' மதுபான ஆலை; சென்னை, வேளச்சேரியில் உள்ள, 'ஜாஸ் சினிமாஸ்' நிறுவனம்.ஜெ., உதவியாளர், பூங்குன்றனின் வீடு, இளவரசி மகன், விவேக், அவரது சகோதரிகள், கிருஷ்ணபிரியா, ஷகிலா உள்ளிட்டோரின் வீடுகள் என, ஐந்து நாட்கள், இந்த சோதனை தொடர்ந்தது.அதன் தொடர்ச்சியாக, சென்னையில், ஜெ., வசித்த போயஸ் தோட்ட இல்லத்திலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


அங்குள்ள சசிகலா அறையில், 'லேப் - டாப், பென் டிரைவ்' மற்றும் ஜெயலலிதாவுக்கு, டி.ஜி.பி., அசோக்குமார் எழுதிய, ரகசிய கடிதம் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கின. இச்சோதனை யில் இதுவரை, 5,000 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால், சசிகலா குடும்பத்தினரின் தமிழக சொத்துகளை பறிமுதல் செய்ய, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, அவர்கள் நடத்திய போலி நிறுவனங்களின் வெளிநாட்டு பரிவர்த்தனை

Advertisement

குறித்த விசாரணையையும்துவக்கி உள்ளது. இதனால், சசி கும்பலுக்கு சிக்கல் அதிகரித்து உள்ளது.


முடக்கியது



இது குறித்து, தமிழக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு தலைமையக அதிகாரிகள் கூறியதாவது:சசிகலா குடும்பத்தினர், 1996க்கு பின், குறிப்பாக, ஜெ., மீண்டும் ஆட்சிக்கு வந்த, 2001க்குப் பின், ஏராளமான போலி நிறுவனங் களை துவக்கியுள்ளனர். அதில், சில நிறுவனங் கள், பெயரளவுக்கு இயங்கியதால், அவற்றை மத்திய அரசு முடக்கியது. நாங்கள் நடத்திய சோதனையின் போது, சசி கும்பலுக்கு சொந்த மான, 20க்கும் மேற்பட்ட போலி நிறுவனங் களின், 100க்கும் அதிகமான வங்கிக் கணக்கு களை முடக்கினோம்.


தற்போது, அந்த போலி நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகளை ஆராயத் துவங்கியுள்ளோம். அதில், சில நிறுவனங்கள், அன்னிய பரிவர்த்தனை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை முழுமையாக ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அன்னிய பரிவர்த்தனை தொடர்பான வழக்காக இது மாறுவதால், மத்திய அமலாக்கத் துறையும், விரைவில் களத்தில் இறங்கவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Palanivelu - Chennai,இந்தியா
18-பிப்-201820:46:08 IST Report Abuse

S.Palaniveluவடிவேலு ஜோக் தான் ஞாபகம் வருது .." என்னுடைய வட்ட கிணத்த காணும் .....

Rate this:

குத்புதீன்.திருவாரூர்அப்படியே தோண்டிட்டாலும்.....போயி புள்ள குட்டிய பாருங்கப்பா..

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-பிப்-201817:16:29 IST Report Abuse

Pugazh V@Ravishankar:: ரொம்ப பயந்துட்டீங்களோ...அடாபுடான்னு அநாகரிகமாக, நீ வா போ ன்னு அவமரியாதையாக பதில் கமெண்ட் போடறீங்களே... மத்திய அரசு மீதான நம்பிக்கை , பிஜேபி க்கு ஓட்டு போட்டவங்களுக்கே என்னிக்கோ போயிடுச்சு என்பது தான் நிஜம்

Rate this:
18-பிப்-201817:12:50 IST Report Abuse

குவாட்டர் கோவிந்தன்1)இன்னு எத்தனை வருஷ கழிச்சி சசிகலா சொத்து வெவகாரத்துல ரிசல்ட்டு எதிர்பாக்கலா?2) நீரவ் மோடி மேட்டர சுத்தி விட்டு மக்கள தெச திருப்ப சசிகலா கேச கிண்டி மக்களுக்கு அதிர்ச்சி குடுத்தா கொஞ்ச நாளக்கி நீரவ் மோடி மேட்டரு அமுங்கிரு... ரெண்டுல ஒன்னு எத்து நைனா???

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
18-பிப்-201816:41:59 IST Report Abuse

Endrum IndianShashikala Ramesh Patankar: From a milk vendor, to a petty drug peddler, to lording over a drug business with property worth Rs 100 crores, and getting people addicted to drugs such as mephedrone or meow-meow, hash and other drugs, Baby has come a long way in the criminal world. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் சசிகலா என்ற பெயர் இருந்தால் அடிமட்ட கீழ்மட்ட வேலைக்காரியானாலும் ஊழலால், கொள்ளை என்ற தொழில் எடுத்துக்கொண்டால் மிக உயர்ந்த இடத்திற்கு வருவார்கள் என்று நிரூபணமாகிறது.

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
18-பிப்-201816:16:55 IST Report Abuse

Shanuஅழகு நிலையம் போனால், யாரும் குமாரி ஆகி விடலாம். சசிகலாவுக்கு இந்த மேக்கப் எதற்கு. ??

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
18-பிப்-201815:22:31 IST Report Abuse

Endrum Indian5 .2 லட்சம் கோடி கொள்ளையடித்தது ஜெயாவின் கூட்டம் என்று ப்ரூவ் ஆனால் தான் நான் இதை ஒப்புக்கொள்வேன், இது வரை வெறும் ரூ 5000 கோடி என்று வந்திருக்கின்றது ஆனால் வெறும் 66 கோடி ஊழலுக்குத்தான் பரப்பன சிறை தண்டனை. இந்த ரூ. 5000 கோடிக்கு மற்றும் இன்னும் கண்டு பிடிக்கப்போகும் கோடானு கோடிகளுக்கு என்ன தண்டனை??? இவனுங்க அடிச்ச கொள்ளை, நீராவி மோடி அடிச்ச ஜூவல்லரி பஞ்சாபி நேஷனல் பேங்க் கொள்ளை, மல்லையா, பாவி சிதம்பரம் அடிச்ச கொள்ளை, சோனியா கொள்ளை இதையெல்லாம் வெளியே கொண்டு வந்து நமது அரசு கருவூலத்தில் சமர்ப்பித்தால் இன்னும் 5 x 5 வருட திட்டம் இந்தியா மக்களிடம் வரி என்ற ஒன்று இல்லாமலே அரசு செய்யலாமே.

Rate this:
Sanjay - Chennai,இந்தியா
18-பிப்-201815:04:30 IST Report Abuse

SanjayBala covai - Idiotic comments from you

Rate this:
Kakamalar - Chenai,இந்தியா
18-பிப்-201814:49:32 IST Report Abuse

Kakamalarஒரு சின்ன குண்டூசி வச்சு நொன்டுங்கடா, ஒரு 30 வருஷம் கழிச்சு நல்லவன்னு சொல்லி வெளிநாட்டுக்கு பறக்க விடுங்க

Rate this:
mohan - chennai,இந்தியா
18-பிப்-201814:42:24 IST Report Abuse

mohanவெற்று நாடகம். சீனாவில் நடப்பது போல இங்கே நடக்க போவதில்லை. பின் ஏன் அரசு அதிகாரிகளை அலைக்கழிக்க வேண்டும். வெட்டி செலவு...

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement