பிரதமர் சொன்னதால் அணிகள் இணைப்புக்கு சம்மதித்தேன்: பன்னீர் பேச்சால் அ.தி.மு.க.,வில் அதிர்வலை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பிரதமர் சொன்னதால் அணிகள்
இணைப்புக்கு சம்மதித்தேன்!
பன்னீர் பேச்சால் அ.தி.மு.க.,வில் அதிர்வலை

அ.தி.மு.க., அணிகள்இணைந்த பின், சில மாதங்களாக அமைதி காத்த, துணை முதல்வர், பன்னீர்செல்வம், திடீரென அணிகள் இணைப்பு பின்னணி குறித்தும், சசிகலா குடும்பத்தினர் செய்த தீங்குகள் குறித்தும் பேசியிருப்பது, பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.அவரது பேச்சின்பின்னணி குறித்து,முதல்வர் தரப்பினரும் விசாரித்து வருகின்றனர்.

Modi,Panneerselvam, Palanisamy, பிரதமர் மோடி , துணை முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., சசிகலா குடும்பம், முதல்வர்  பழனிசாமி, பன்னீர் பேச்சு , ஜெயலலிதா மறைவு, ஜெயலலிதா பிறந்த நாள், Prime Minister Modi, Deputy Chief Minister Panneerselvam, AIADMK, Sasikala Family, Chief Minister Palanisamy, Panneer Speech, Jayalalitha death, Jayalalitha birthday,OPS,

ஜெ., மறைவுக்கு பின், பன்னீர்செல்வம் முதல்வரானார். அவரை ராஜினாமா செய்ய வைத்து, சசிகலா,முதல்வர் ஆக முயற்சித்தார். அதை எதிர்த்து, பன்னீர் போர்க்கொடி துாக்கினார். அவர் பின்னால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணி வகுத்ததால், தனி அணியாகச் செயல்படத் துவங்கினார்.

சொத்து குவிப்புவழக்கில், சிறை தண்டனை பெற்றதால், சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. வேறு வழியின்றி, பழனிசாமியை முதல்வராக்கினார். அவர் முதல்வரானதும்,
மத்திய அரசுடன் நெருக்கமானார்.சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டினார். அதன் தொடர்ச்சியாக, பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைந்தன. தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட, அ.தி.மு.க.,கட்சி மற்றும் சின்னத்தையும் மீட்டனர். இணைப்பு பின்னணியில்,பிரதமர் மோடி இருப்பதாக, அப்போதே அரசல்புரசலாகபேச்சு எழுந்தது. இணைப்புக்கு பின், பதவிகள் பங்கிடப் பட்டன.


அதில், பன்னீர்செல்வம்துணை முதல்வராக வும், அ.தி.மு.க., ஒருங்கிணைப் பாளராகவும் பொறுப்பேற்றார்.எனினும், அவரால் தன் ஆதரவாளர்களுக்கு, பதவிகளை பெற்றுத் தர இயலவில்லை. சக அமைச்சர்களிடமும், முக்கியத்துவம் இல்லை என்ற புகார் எழுந்த

படி உள்ளது.இந்த சூழ்நிலையில்,நேற்று முன்தினம், தேனி மாவட்டத்தில் நடந்த, ஜெ., பிறந்த நாள் ஆலோசனைக் கூட்டத்தில், பன்னீர்செல்வம் பேசியது, ஆளும் கட்சி வட்டாரத்தில், அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.


அவர் பேசியதாவது:நான் பழனிசாமி அணியுடன் இணைவதற்கு முன், மரியாதை நிமித்தமாக,பிரதமரை சந்தித்தேன். அப் போது அவர், 'தற்போதுள்ள சூழ்நிலையில், கட்சியைக்காப்பாற்ற, நீங்கள் இணைய வேண்டும்' என்றார்.நானும், 'சரி இணைந்து விடுகிறேன். எனக்கு கட்சி பதவி போதும்; அமைச்சர் பதவி வேண்டாம்' என்றேன். அவர், 'இல்லை,நீங்கள் அமைச்சராக இருக்க வேண்டும்' என்றார். அதனால் தான், இன்று அமைச்சராக உள்ளேன். பிரதமரிடம் கூறியதை, அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணியிடமும் கூறினேன்;அவர்களும், 'நீங்கள் அமைச்சராக இருக்க வேண்டும்' என்றனர்.


எனக்கு அமைச்சர்பதவி மீது, ஆசை இல்லை. நான்கு முறை, எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். இரண்டு முறை,ஜெயலலிதாவே, முதல்வர்பதவியை கொடுத்தார். இந்த பெருமையே எனக்கு போதும். ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கடிதம் எழுதி தந்து, மீண்டும் சேர்ந்தார் சசிகலா. அந்த நேரத்தில், ஜெ., என்னை அழைத்து, 'தினகரனோடு பேசுகிறீர்களா' எனக் கேட்டார்.'நீங்கள் கூறிய பின் பேசுவதில்லை' என்றேன்.'நான் உயிரோடுஇருக்கும் வரை, அவனைஎன் வீட்டு வாசலில் நுழைய விட மாட்டேன்' என, ஜெ., கூறினார்.எதற்காக, அப்படிகூறினார் என, விளக்கம் கேட்க முடியாது. 'சரி' என்று மட்டும் பதில் அளித்தேன். 'நீங்கள் ஒருவர் மட்டுமாவது, விசுவாசமாக இருங்கள்' என, என்னிடம் ஜெ., கூறினார்.


ஜெ.,க்கு விசுவாசமாக இருந்ததால், சசி குடும்பம்,'என்னை துரோகி'என்றது. எனக்கு,2016 தேர்தலில், 'சீட்'தரக்கூடாது என, போராடினர்.அதை மீறி, ஜெ., சீட் கொடுத்தார். தோற்கடிக்க, தினகரன்,தங்க தமிழ்செல்வன் போன்றோர் வேலை பார்த்தனர். நான், இதை வெளியில் கூறவில்லை; யார் மீதும் பழி போடவில்லை.'இந்த தேர்தலில், பன்னீர்செல்வம் உறுதியாக தோற்பான். உடுத்தி இருந்த வேட்டியோடு, அவன்வீட்டுக்கு செல்ல வேண்டும்' என,சசிகலா ஆவேசமாக கூறிய

Advertisement

தகவல், எனக்கு தெரிய வந்தது.அவரால், எனக்கு நேர்ந்த கொடுமைகளில், 1 சதவீதத்தையே கூறியுள்ளேன்.


மீதமுள்ள, 99 சதவீதம், இதுபோல் கோபம் வரும்போது வெளியில் வரும். எனக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு அளவே கிடையாது. வேறு நபராகஇருந்திருந்தால், தற்கொலை செய்திருப்பார் அல்லது கட்சியேவேண்டாம் என, ஓடி இருப்பார். நான் ஜெ.,வுக்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டேன்.இவ்வாறு அவர்பேசினார்.


துணை முதல்வர்திடீரென, இணைப்பு பின்னணி குறித்தும், சசிகலா குடும்பம் இழைத்த தீங்குகள் குறித்தும் பேசியிருப்பது, பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., நெருக்குதலால், பழனிசாமியுடன் இணைந்த பின், பா.ஜ., மேலிடம், பன்னீரை கண்டு கொள்ள வில்லை. தமிழக அரசை, பா.ஜ., தலைவர்கள் வசைபாடத் துவங்கி உள்ளனர்.இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கவும், 'தேவைப்பட்டால், தனி அணி காண தயங்க மாட்டேன்' என, பழனிசாமி தரப்புக்கு எச்சரிக்கை விடுக்கவும், அவ்வாறு அவர் பேசியிருக்கலாம் என்றும்கூறப்படுகிறது.


துணை முதல்வரின் பேச்சு, முதல்வர் தரப்பிலும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேச்சின் பின்னணி குறித்து, அவர்களும் விசாரித்துவருகின்றனர். 'பன்னீர்செல்வம்சிந்தித்து பேசக் கூடியவர்; ஏதோ திட்டத்துடன் தான், இவ்வாறு பேசி உள்ளார்' என, பழனிசாமி ஆதரவாளர்கள் நம்புகின்றனர். - நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-பிப்-201819:16:20 IST Report Abuse

KGSriramanதுணை முதல்வர்,, பன்னீர் செல்வம், அவர்களே,, இப்போது இப்படி,! பேசும் தங்கள்,, ஜெயலலிதா மீது உண்மையான, பற்று,,,பாசம், விசுவாசம்,,,இருந்திருக்குமானால்,,, அம்மா, மருத்துவ மனனையில் சேர்க்கப்பட்டது,,, முதல். அவர் மறைந்து,, அல்ல, அல்ல,அவர் இறக்கும், தருவாயில், சசிகலவால்,,,,அவர். ஏற்பாட்டின் படி,ஏன்?? முதல்வர் பதவியை,,ஏற்று கொண்டீர்கள்??? அடுத்து,,சசிக்கலாவை,எதற்கு??கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு, தேர்வு,, செய்ய,,,துணை. போனீர்கள்,,,, துணை முதல்வரே?? அன்று,,, தனக்கு. முதல்வர் கிடைத்தவுடன்!! வாய் பிளந்து,,,கட்சியை பற்றி,,,எந்தவித, கவலையும். அடையாமல்,அமைதி காத்தது. ஏன்?? தனக்கு,,,கிடைத்த முதல்வர்! பதவி, பரி போக போகிறது. எனும் நிலையில் தானே,, கடற்கரைக்கு,, அம்மா, சமாதிக்கு,, ஓடி! தியானம்,,,செய்தீர்கள்!! தன் பதவிக்கு. ஆபத்து. வந்த போது தான் நீங்கள். உங்கள் நாடகத்தை, அரங்கேற்றம்! செய்தீர்கள்!! தமிழகத்தில்,,,,போனி ஆகாத,,,(செல்லாகாசான) பா.ஜ.க. உங்கள் மூலம்,,, தன். நாரதர். வேலையை. தமிழகத்தில் துவங்கியது.. நீங்களும்,, பா.ஜா.க, வின். எடுபிடியாக. மாறினீர்கள்!!! காரணம்,,உங்களின் முதல்வர் பதவி ஆசை!!மற்றும். ஊழல் வழக்கு... பா.ஜா.க.,,,உங்களால். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இக்களை வளைக்க திட்டமிட்டு செயல்பட்டது, ஆனால், உங்களை நம்பி பெரும் அளவு. எம்.எல்.ஏ, இக்கள். வரவில்லை..!!? உங்களின். இயலாமையை,,காலம் கடந்து. பா.ஜ.க. உணர்ந்து எடப்பாடியை,,,, தன் வச படுத்தி கொண்டது.. தாங்கள் தனிமை பட்டு போனீர்கள்,,, பின். பா.ஜ.க. யோசனைப்படி,,,துணை முதல்வர் பதவியை. அடைந்தீர்கள்,,,, இருந்தாலும். உங்களை. எடப்பாடி முழுமையாக,, நம்பாத. காரணத்தால். இப்பொழுது,, மீண்டும் பழைய பல்லவியை. பாட துவங்கி விடீர்கள்..உங்களை அ.தி.மு.க வினர். இப்போது. நம்ப. தயாரில்லை!! காரணம் தாங்கள். பி.ஜே.பி.இன். ,,,கை ஆள். என. மக்கள் முடிவு செய்து விட்டார்கள்,, எனவே. இனி. உங்கள். பேச்சி. எடுபடாது... என்பதை. உணர்ந்து கொள்ளுங்கள்...

Rate this:
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
18-பிப்-201817:25:54 IST Report Abuse

John Shiva   U.Kபன்னீரை முதலில் கட்சியில் இருந்து உடைத்தும் மோடி ,சேர்த்ததும் மோடி .11 mla களுடன் இருந்த பன்னீரை சேர்த்த காரணம் மோடிக்கு 122 MLA களுடன் பன்னீர் வந்தால் தான் இரட்டை இலையை தாமரை ஆக்க முடியும். பன்னீர் மோடியுடன் சேர்ந்து நடிக்கிறார்

Rate this:
ilicha vaayan (sundararajan) - chennai,இந்தியா
18-பிப்-201817:10:08 IST Report Abuse

ilicha vaayan (sundararajan)கருப்பன் குசும்பன் எதுக்கோ அடி போடுறான். வசூல் சரியா நடக்கலையா ? அல்லது பங்கு சரியா போடலையா ? அல்லது முதல்வர் பதவி இல்லாம ரொம்ப அரிப்பு எடுக்குதா ?

Rate this:
ilicha vaayan (sundararajan) - chennai,இந்தியா
18-பிப்-201816:57:06 IST Report Abuse

ilicha vaayan (sundararajan)நடந்தது நடந்து போச்சு . அதுக்கு பரிகாரம் வேணும் .உடனடியா சட்ட சபையை கலைத்து தேர்தல் நடத்துங்க . நீங்கள் சொல்லும் அந்து போன ரீல் கதையை மக்கள் நம்புவார்களா என்று பாப்போம் .

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
18-பிப்-201815:39:40 IST Report Abuse

C.Elumalaiஒபிஸ் அதிமுகவுக்கும் , அரசியலுக்கும் வரும்போது, சதிகலா கேசட் விற்றார். தினகரன் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தான். இப்போ கட்சியே கபளீகரம் பண்ண பார்த்தாங்க. புரட்சிதலைவர் ஆன்மா,மோடி ரூபத்தில் வந்து கட்சியை காப்பற்றவைத்தார். கட்சியும், தொண்டர்களும், மக்களும், காப்பாற்றபட்டனர். நன்றி மோடி அவர்களுக்கு.

Rate this:
mrsethuraman - Bangalore,இந்தியா
18-பிப்-201814:57:20 IST Report Abuse

mrsethuraman  முன்பு சசிகலா தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக சொன்னார் .இப்போது மோடி பேச்சை கேட்டுத்தான் எடப்பாடியுடன் இணைந்ததாக சொல்கிறார். சுதந்திரமாக செய்லபடக்கூட தெரியாதவர்கள் நமக்கு தலைவர்களாய் வாய்த்திருக்கிறார்கள் .

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-பிப்-201814:05:48 IST Report Abuse

Nallavan Nallavanசுடலைக்கு ஏற்பட்ட வயிற்றெரிச்சலுக்கு மருந்துண்டா ?

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
18-பிப்-201813:32:29 IST Report Abuse

Rahimஅதிமுகவின் உட்கட்சி பிரச்சினைக்கும் பாஜக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை//////யக்கோவ் அட எங்கிருக்கிங்க அம்மிணி கொஞ்சம் இந்த செய்தியை பார்த்து கருத்து சொல்லுங்க யக்கோவ்.

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
18-பிப்-201812:16:22 IST Report Abuse

கைப்புள்ளசரி அப்படியே மோடி கட்ட பஞ்சாயத்து பண்ணி இருந்தாலும் அது நல்லதுக்குதான். நினைத்து பாருங்கள். தப்பி தவறி சசிகலா முதல்வர் ஆகி இருந்தால் தமிழ்நாடு என்ன ஆகி இருக்கும்? மவனே மவுண்ட் ரோட்ல ஒரு பய போக முடியாது. பார்த்தீங்கள்ல அன்னிக்கு ஒரே ஒரு நாள் சமாதிக்கு போனப்போ? அவ்ளோதான் எல்லாவனும் காலி ஆகி இருப்பீங்க. அப்படி இல்லேனா ஏதாச்சும் ஏடா கூடமா நடந்து சுடலை வந்திருந்தா? உதயநிதி புதையநிதி சுதயாநிதி ன்னு ஒரு பெரும் வானர கூட்டமே கெளம்பி இருக்கும் இந்நேரம், தமிழகத்தை கூறுபோட்டு விக்க. அப்புறம் மெட்றாஸ்ல ஒரு சாதாரண கவுன்சிலர் பையனால் மாநரகரமே ஸ்தம்பித்ததுன்னு செய்தி வரும். அமைதியா அடுத்த தேர்தல் வரவரைக்கும் சும்மா இருங்க.

Rate this:
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
18-பிப்-201811:40:48 IST Report Abuse

Ramakrishnan Natesanஅன்றே ஸ்டாலின் சொன்னார் மோடி கட்ட பஞ்சாயத்து செய்கிறார் என்று அன்று அவரை தூற்றினார்கள் ஆனால் இன்று அது தான் நடந்துள்ளது. பன்னீர் இப்போது வாயை திறந்தது பழனிசாமி சசிகலாவிடம் சமரசம் பேச தூது அனுப்பிய தகவல் வந்ததால் வெகுண்டு எழுந்துள்ளார் ஆகவே தான் தினகரனை ஒரு புடி புடித்துள்ளார் பாவம் இவர் நிலை

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement