இந்தியா - ஈரான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: வர்த்தகத்துக்கு கரன்சி பயன்பாட்டிலும் அதிரடி முடிவு Dinamalar
பதிவு செய்த நாள் :
கையெழுத்து!
இந்தியா - ஈரான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள்...
வர்த்தகத்துக்கு கரன்சி பயன்பாட்டிலும் முடிவு

புதுடில்லி,:இந்தியா வந்துள்ள, ஈரான் அதிபர், ஹஸன் ரூஹானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே, முக்கியத்துவம் வாய்ந்த, ஒன்பது ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. இருதரப்பு வர்த்தகத்துக்கு, நம் நாட்டு ரூபாய், ஈரான் கரன்சியான ரியால் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, இரு நாடுகளின் உயர் மட்டக் குழுவினர் ஒப்புக் கொண்டனர்.

Modi,Hassan Rouhani,Sabahar Harbor,  இந்தியா - ஈரான் ஒப்பந்தம் ,ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி, பிரதமர் நரேந்திர மோடி, சபாஹார் துறைமுகம், ஐதராபாத் மசூதி, வர்த்தக ஒப்பந்தம்,இந்திய கரன்சி ரூபாய், ஈரான் கரன்சி ரியால், India-Iran Treaty, Iranian President Hassan Rouhani, Prime Minister Narendra Modi,Sabahar Harbor, Hyderabad Mosque, Trade Agreement, Indian Currency Rupee, Iran Currency Exchange,


ஈரான் அதிபர், ஹஸன் ரூஹானி, மூன்று நாள் பயணமாக, 15ல் இந்தியா வந்தார். முதல் நாளில், தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில், பல்வேறு முஸ்லிம் மத குழுக்களுடன், ரூஹானி பேச்சு நடத்தினார். அப்போது, 'அனைத்து குழுக்களும், உள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, அவர் வலியுறுத்தினார்.மேலும், உலக நாடுகளுடன் நட்புறவை பேணுவதில், ஈரான் ஆர்வமாக உள்ளதாகவும், உலகம் முழுவதும் அமைதி ஏற்பட வேண்டும் என விரும்புவதாகவும், ரூஹானி கூறினார்.


நேற்று முன்தினம், ஐதராபாதில் உள்ள மசூதிக்கு சென்ற ரூஹானி, தொழுகையை முடித்து விட்டு, முஸ்லிம்கள் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த மசூதிக்கு வருகை தரும், முதல், ஈரான் அதிபர், ரூஹானி என்பது

குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து, தலைநகர் டில்லியில் நேற்று, இந்தியாவைச் சேர்ந்த உயர் மட்ட குழுவினருடன், ஈரான் நாட்டு குழுவினர், பல்வேறு துறை ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்தினர்.


இதில் இணக்கம் ஏற்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி - ரூஹானி முன்னிலையில், மருத்துவ துறையில் ஒத்துழைப்பு, 'விசா' விதிகள் தளர்வு, ஈரானில் உள்ள,சபாஹார் துறைமுக மேம்பாட்டுக்கு உதவி உட்பட, ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின. அதன் பின், மோடி - ரூஹானி வெளியிட்ட கூட்டு அறிக்கையில், 'இந்தியா - ஈரான் நாடுகள், பரஸ்பரம், ஒன்றையொன்று மதிக்கின்றன. இரு நாடுகளின் நட்புறவு மேலும் வலுவடைந்து உள்ளது' என, கூறப்பட்டுள்ளது.


இதுகுறித்து மோடி கூறியதாவது:



ஆப்கனுடன் வர்த்தகம் செய்ய, சபாஹார் துறை முகம் மூலம் வழி ஏற்படுத்திக் கொடுத்த, ஈரான் அதிபரின் தொலைநோக்கு பார்வை பாராட்டுக் குரியது. இதற்காக,அவருக்கு நன்றிதெரிவிக்கிறேன். ஆப்கன், பாதுகாப்பாகவும், செழிப்பா கவும் திகழ, இந்தியாவும், ஈரானும் விரும்புகின்றன. நம் அண்டை நாடுகள், பயங்கரவாத தொல்லையில் இருந்து விடுபட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஈரான் அதிபர், ரூஹானி கூறுகையில், ''பிரதமர் மோடியின் அன்பான உபசரிப்பு பாராட்டுக் குரியது. இந்தியா - ஈரான் இடையிலான நட்புறவு, வர்த்தகம் தாண்டியது; வரலாற்று சிறப்பு வாய்ந்தது,'' என்றார்.


இந்தியா - ஈரான் இடையே, இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவதில் மற்றொரு சிறப்பம்ச மாக, இருதரப்பு வர்த்தகத்துக்கு, நம் நாட்டு

Advertisement

ரூபாய்,ஈரான் கரன்சியான ரியால் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, இரு நாடுகளின் உயர் மட்டக் குழுவினர் ஒப்புக் கொண்டனர்.


பாக்.,கிற்கு மூக்குடைப்பு!



பாக்., நிலப்பகுதி வழியாக, சாலை மார்க்கமாக, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளுடன், இந்தியா, வர்த்தகம் செய்வதற்கு, பாக்., அனுமதி மறுத்தது. இதையடுத்து, இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள், ஆப்கன் - மத்திய ஆசிய நாடுகளுக்கான வர்த் தக பாதையை உருவாக்க முடிவு செய்தன. ஓமன் வளைகுடாவில், சபாஹார் துறை முகத்தை உருவாக்கவும், அதனுடன் தொடர் புடைய சாலைகள், ரயில் பாதைகள் உருவாக்க வும், 3,500 கோடி ரூபாய் அளிப்பதாக, 2016ல், இந்தியா கூறியது. இதன்படி, துறைமுகம் அமைப்பதில், ஈரானுக்கு, இந்தியா உதவி வருகிறது.


இந்த துறைமுகம் மூலம், பாகிஸ்தானின் உதவியின்றி, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகள் இடையே வர்த்தகம் செய்வது எளிதாகும். கடந்தாண்டு, அக்டோபரில், இந்தியாவில் இருந்து, கடல் வழியாக கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட,கோதுமை கன்டெய்னர், சபாஹார் துறைமுகம் மூலம் ஆப்கனை சென்றடைந்தது.


இந்தியா வந்துள்ள ஈரான் அதிபர், ஹஸன் ரூஹானி, பிரதமர் மோடி முன்னிலையில், சபாஹாரில் உள்ள, பெஹெஸ்தி துறைமுக பணிகள் மேம்பாடு தொடர்பாக, ஈரான் துறை முகம் மற்றும் கடல்சார் பணிகள் நிறுவனத்துக் கும், இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே, நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (15+ 52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahim - Riyadh,சவுதி அரேபியா
18-பிப்-201813:38:24 IST Report Abuse

Rahimஈரான் தைரியத்தின் மறு உருவம், உலகமே அமெரிக்காரனின் டாலரில் வியாபாரங்களை செய்து அமெரிக்க காரனின் பொருளாதாரம் உயர பாடு பட்டு கொண்டிருக்க தைரியமாக டாலரில் வியாபாரம் இல்லை என்று சூளுரைத்து அதனால் அமெரிக்க சர்வாதிகாரி 13 ஆண்டுகள் பொருளாதார தடை விதித்தும் அதிலிருந்து போராடி மீண்ட பீனிக்ஸ் பறவை, இன்றும் அமெரிக்க டாலரில் வியாபாரம் இல்லை என்பது தான் அந்த தைர்யத்தின் அம்சம், இந்திய மக்களுக்கும் ஈரான் மக்களுக்கும் வாழ்த்துக்கள்.

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
18-பிப்-201813:28:22 IST Report Abuse

Rahimஎவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டாலும் காவிகளுக்கு இது எப்போதும் போலத்தான் , மோடி ஒப்பந்தம் போடும் இந்த முஸ்லீம்கள் தீவிரவாதிகள் ,பச்சைகள், ஹவாலாக்கள், நாலு பொண்டாட்டி கட்டுறவங்க ,மூர்க்கத்தினர் ,பெண்களை புள்ளை பெறும் இயந்திரங்களாக பாவிப்போர் போன்ற கீழ்த்தரமான கமெண்டுகள் தான் வரும்.

Rate this:
Pats - Coimbatore,இந்தியா
18-பிப்-201813:12:05 IST Report Abuse

Patsஅவரு ஷியா மசூதிலதானே வழிபட்டாரு? சன்னி மசூதி உள்ள விடமாட்டானுங்கோ. இவிக அங்க போமாட்டாக, அவிக இங்கன வரமாட்டாக.

Rate this:
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-201812:53:09 IST Report Abuse

R.PERUMALRAJAஉலகவில் உள்ள பிரச்சணைகளை தீர்ப்பதில் அமெரிக்கா சிறிது காலமாகவே ஆர்வம் / அக்கறை கொண்டு ஈடுபட்டு கொண்டிருக்கிறது ....குறிப்பாக எதிரி நாடாக இருந்த கியூபா , அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையால் நட்பு நாடாக மாறியது . தற்பொழுது அமெரிக்காவின் பார்வை ஈரான் பக்கம் திரும்பி இருக்கிறது , ஈரானை அமெரிக்காவின் நட்பு வலயத்திற்குள் கொண்டு வர / மிக வேகமாக கொண்டு வர , மூன்றாவது நாட்டின் உதவி அவசியம் , மூன்றாவது நாடாக இருந்து / செயல்பட்டு இந்தியா உதவுமாயின் , பின் இந்தியா - ஈரான் - அமெரிக்கா சேர்ந்து பொருளாதார கூட்டணி ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் , ஈரானும் அதன் என்னை வயல்களை இந்தியாவிற்கு விற்கும் , அமெரிக்காவும் இந்தியாவிற்கு ஐ . நா மூலம் ராஜதந்திர உதவிகளை செய்யும் , மேலும் ஈரானின் என்னை வயல்களில் இந்திய தொழிலதிபர்கள் நேரடி முதலீடுகள் செய்து இந்தியாவில் பெட்ரோல் / டீசல் விலையை குறைக்க வாய்ப்பு ஏற்படும் .......பாகிஸ்தான் துணையுடன் இந்தியாவில் செயல்படும் தொழிலபதிர்களை இரானில் உள்ள என்னை கிணற்றில் முதலீடு செய்வர்களேயானால் இந்தியாவின் அணைத்து முயற்சிகளும் வீண் , பெட்ரோல் / டீசல் விலை குறைப்பு உள்பட

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-பிப்-201810:11:31 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்து போடப்பட்ட ஒப்பந்தங்கள் தான் இவை. இந்திய பணத்தை கொடுத்து ஈரானிய எண்ணை வாங்குவதென்பது முன்பே இருக்கும் ஒப்பந்தங்களே. காவிகள் எப்பவும் போல இடத்தை கலகலப்பாக வைத்திருக்க பழைய செய்திகளை போட்டு வெறுப்பேத்துகிறார்கள். சுவையான கிளை செய்தி. 2012 இல், இந்த வியாபாரங்களுக்கு பணம் கொடுக்க அமெரிக்காவில் மற்றும் ஐரோப்பாவில் கால் பதிக்காத இந்திய வங்கியை தேடினார்கள். யூகோ (UCO) வங்கிக்கு அடித்தது லாட்டரி. ஒரே இரவில் பல நூறு பில்லியன் ரூபாய் வங்கியில் போடப்பட்டது. 2015 இல் 150 பில்லியன் ரூபாய். ஆனால் 2016 இல் IDBI க்கு அந்த பரிமாற்றங்கள் பாஜக அரசால் மாற்றப்பட்டது. மறுபடியும் ஈரான் மேல் பொருளாதார தடையை டிரம்ப் அரசு கடுமையாக்கி உள்ளது. மீண்டும் யூகோ வங்கிக்கு அதிர்ஷ்டம் திரும்பும்.

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
18-பிப்-201815:14:22 IST Report Abuse

Sitaramen Varadarajanதிரு ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா உளறலின் உச்ச கட்டம். எப்படியாவது மோதி அவர்களை குறை சொல்ல வேண்டும். இது நீங்கள் யாருக்கு ஏஜெண்டாக வேலை செய்கிறீர்கள் என்பது ஊரறிந்த ரகசியம் போலத்தான். சும்மாவாவது பேத்தாதீர்கள். மோதியின் புகழ் உங்களுக்கு வயிற்றெரிச்சலை கொடுத்தால் போய் முட்டிக்கொள்ளுங்கள் எங்கேயாவது.......

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-பிப்-201808:55:56 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎன்னமோப்பா..எங்களுக்கு ஒன்னும் விளங்களப்பா...ஏழை பாழைகளுக்கு நல்லது நடந்தா சரி...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-பிப்-201807:46:16 IST Report Abuse

ஆரூர் ரங்ஷீஆக்களிடம் நன்மதிப்பு வளரும் . மற்றவர்களை வெறுப்படைய வைக்கும்

Rate this:
Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா
18-பிப்-201804:12:22 IST Report Abuse

Madurai K.சிவகுமார்// ஈரான் துறை முகம் மற்றும் கடல்சார் பணிகள் நிறுவனத்துக் கும், இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே, நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.// இந்த இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் கம்பெனி ஆரம்பித்தது Jan, 2015. ஆரம்பித்த 3 வருடங்களில் விஸ்வரூப வளர்ச்சி. ஒருவேளை நிதின் கட்கரி அல்லது அமித் ஷா பையன் கம்பெனியா இருக்குமோ?

Rate this:
தமிழன் - தூத்துக்குடி,இந்தியா
18-பிப்-201811:08:57 IST Report Abuse

தமிழன்நிறுவன இயக்குனர்கள் பட்டியல். ANIL UDHAVRAO DIGGIKAR - Director RAVI MANUBHAI PARMAR - Director RABINDRA KUMAR AGARWAL - Additional Director ALOK SRIVASTAVA - Director DINKAR PRAKASH SRIVASTAVA - Director ARUN KUMAR GUPTA - Managing Director நிறுவன இயக்குனர்களில் பலர் Gail நிறுவனத்திலும், சாகர்மாலா திட்ட மேம்பாட்டு நிறுவனத்திலும் பதவியில் இருப்பவர்கள். CIN:U61100MH2015GOI261274 Company Name:INDIA PORTS GLOBAL LIMITED Company Status:Active RoC:RoC-Mumbai Registration Number:261274 Company Category:Company limited by Shares "Company Sub Category:Union Govt company" Class of Company:Private Date of Incorporation:22 January 2015 Age of Company:3 years, 0 month, 27 days Activity:Sea and coastal water transport...

Rate this:
Ray - Chennai,இந்தியா
18-பிப்-201803:43:47 IST Report Abuse

Rayஒப்பந்தம் உருதுவில் கண்ணில் பட்டதா? என்வழி உன் வழி யல்ல

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-பிப்-201803:23:00 IST Report Abuse

Kasimani Baskaranஇந்தியா ஈரான் நல்லுறவு மேம்பட வாழ்த்துக்கள்...

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement