SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்கலை கல்லூரி ஆசிரியர்கள் டிபிஐ அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

2018-02-16@ 01:18:12

சென்னை: கல்லூரி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக்கோரி கல்லூரி ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கடந்த 5 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் கேட்ட அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு வந்தனர். அங்குள்ள கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் போட்டனர். இதையடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் அங்கு வந்து ஆசிரியர்களை டிபிஐ வளாகத்துக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு சில ஆசிரியர்கள் மட்டும் கல்லூரிக் கல்வி இயக்குநரை சந்தித்து மனு கொடுத்தனர். இது குறித்து பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் காந்திராஜ் கூறியதாவது: ஓய்வு பெறும் வயதை 58க்கு மேல் உயர்த்தக்கூடாது என்பது உள்ளிட்ட 28 கோரிக்கைகள் கொடுத்துள்ளோம். இதன் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்