காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைப்பு| Dinamalar

காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைப்பு

Updated : பிப் 16, 2018 | Added : பிப் 16, 2018 | கருத்துகள் (44)
Advertisement
CauveryVerdict, காவிரி தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்,

புதுடில்லி: காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 2007 ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக முடிவு எடுக்க, காவிரி நடுவர் மன்றம், 1990ல், அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தில் நீண்ட காலம் நடந்து வந்த வழக்கில், 2007ல், இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இது தொடர்பான அனைத்து மனுக்களையும், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்தது. வழக்கில் 2017 செப்.,20 ல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், காவிரி நீரை உரிமை கோர எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை. காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும். தமிழகத்தில் 20 டி.எம்.சி., நிலத்தடி தண்ணீர் உள்ளது. கர்நாடகாவிற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டில் மாற்றமில்லை. தமிழகத்தில் 20 சதவீத நிலத்தடி நீர் உள்ளது. இதனை பயன்படுத்த வேண்டும். குடிநீர் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, பெங்களூருவுக்கு கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும். காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைக்கிறோம். நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகம் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
16-பிப்-201811:55:17 IST Report Abuse
பாமரன் தமிழகத்தின் ஒதுக்கப்பட்டிருந்த நீர் பங்கை குறைத்தாலும் சரியான மேலாண்மை மூலம் உபயோகித்தால் போதுமானதே. பெங்களூரை அதன் நீர் தேவைகளை விட்டுவிட முடியாது. புவியியல் அமைப்பால் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அதிகம் இருப்பதையும் மறுக்க முடியாது..அரசியல் கண்ணோட்டமில்லாமல் பார்த்தால் யாருக்கும் அநீதி இழைத்ததா தெரியலை ..மாதாந்திர அளவைகள் சொல்லப்பட்டதா தெரியலை. இது திரும்பவும் சிக்கலை ஏற்படுத்தலாம். மேல்முறையீட்டுக்கு வழியில்லாததால் விரைந்து வாரியம் அமைக்க வேண்டும். எதிலும் ஆதாயம் கிடைக்குமான்னு தேடும் தற்போதைய மத்திய அரசு செய்யுமாங்கிறது சந்தேகம்தான். கர்நாடகாவில் தேர்தல் வேறு வருது... பார்ப்போம்..
Rate this:
Share this comment
Cancel
உரிமை குரல் - Chennai,இந்தியா
16-பிப்-201811:47:58 IST Report Abuse
உரிமை குரல் தமிழ்நாடு அரசு 177.25 டி.எம்.சி., தண்ணீரை மதுவிற்கு பயன்படுத்தி விடுவார்கள்? அப்பாறம் எங்க விவசாயிக்கு போய் சேரும்??
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - chennai,இந்தியா
16-பிப்-201811:46:01 IST Report Abuse
மணிமாறன் இங்கே சம்பாத்தித்து செட்டில் ஆகி கட்சி ஆரம்பி க்க போகும் கன்னட நடிகர் ரஜினி உடனே மேடைக்கு வரவும்..கர்நாடகா அரசை தண்ணீர் திறந்து விட சொல்லவும்...
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
16-பிப்-201811:41:40 IST Report Abuse
இடவை கண்ணன் திமுக அரசியல் செய்ய ஆரம்பிச்சுட்டது... .. உங்க அரசியலில் இங்கே நாங்கதான் பலிகடா ஆவறோம்.....இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்தால் நமக்குத்தான் பாதிப்பு.. இந்த தீர்ப்பை அமல் செய்தால், காவேரி மேலாண்மை வாரியம் அமைந்தால் அதுவே போதும்....உங்க அரசியல் சித்து விளையாட்டை நிப்பாட்டுங்க...
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
16-பிப்-201811:58:43 IST Report Abuse
முருகவேல் சண்முகம்../// இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்தால் நமக்குத்தான் பாதிப்பு///அப்பீல் என்பதே கிடையாது, ஒட்டு மொத்த வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுவிட்டது, அமல்படுத்துவதில் மாநில மத்திய அரசுகள் சதி செய்தால் தான் முறையீடு செய்யமுடியும், தீர்ப்பை எதிர்த்து வழக்கு கிடையாது. அடுத்த 15 வருடங்களுக்கு இது தான் தீர்ப்பு....
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
16-பிப்-201811:40:07 IST Report Abuse
makkal neethi கடந்த தீர்ப்பு லே 199 தி எம் சி இப்போ 20 குறைஞ்சி 179 அப்புறம் காவிரி மேலாண்மை அமைத்து ஒரு 50 கட்டாகி 129 ஆகும் அப்புறம் ஒரு வழக்கு இப்படியே மக்களையும் விவசாயிங்களையும் முட்டாளாக்கி அரசியல் சாக்கடைகள் உருண்டோட உச்ச நீதி மன்றம் சாக்கடை வழியின் குப்பைகளை அகற்றி தடையில்லாமல் என்றும் ஒரே நாற்றத்துடன் சாக்கடைகள் ஓடிக்கொண்டிருக்க வழிவகுக்கிறது என்று டீக்கடை பெஞ்சில் மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
vaishnavi - nainital,இந்தியா
16-பிப்-201811:35:27 IST Report Abuse
vaishnavi உச்ச நீதி மன்றம் என்ன தீர்ப்பு வந்தாலும் அதை கர்நாடகக்காரன் ஏற்றுக்கொள்ள மாட்டான் அதை நடைமுறைப்படுத்தவும் மாட்டான் உச்ச நீதி மன்றத்தை அவன் மதிக்கவும் மாட்டான் அதை நீதி மன்றமும் கண்டுகொள்ளாது இது தான் நடைமுறை
Rate this:
Share this comment
Cancel
Venkatesh - bangalore,இந்தியா
16-பிப்-201811:32:30 IST Report Abuse
Venkatesh இதுக்கு எடப்பாடி என்ன சொல்லுறார்?
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
16-பிப்-201811:31:56 IST Report Abuse
Kuppuswamykesavan ///Sampath Kumar - chennai,இந்தியா 16-பிப்-2018 11:21 அக்கா டுமீல் இசை அய்யா மோடிக்கு இந்த வாரியம் அமைக்க கோரிக்கை வைங்க பார்ப்போம்./// - ஐயா, எனக்கென்னமோ, பொதுவாக, சட்டமன்றங்களில், முதலமைச்சர்களால் கூறப்படும் திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் தான் (110-விதியின் படி), இந்த செய்தியை படித்தவுடன் நினைவில் வருதுங்க. கடந்த கால ஆட்சியாளர்களால், நமக்கு ஏற்ப்பட்ட அனுபவங்கள் அப்படீங்க?. சரிதானுங்களா?.
Rate this:
Share this comment
Cancel
S.Srinivasa Raghavan - Chennai,இந்தியா
16-பிப்-201811:31:52 IST Report Abuse
S.Srinivasa Raghavan கர்நாடகம் தன்னுடைய வளங்களை பாதுகாக்கிறது. தமிழகம்..? ஏதாவது தடுப்பணை உண்டா? ஏரி குளங்களை தூர் வாருதல் உண்டா? மணல் திருட்டு மட்டும் உண்டு. மக்களுக்கு நன்மை செய்யும் தலைமை வந்தால், பல பிரச்சனைகளை தீர்க்கலாம்.
Rate this:
Share this comment
Thiagarajan - Chennai,இந்தியா
16-பிப்-201811:57:42 IST Report Abuse
Thiagarajanஉண்மைதான்....
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
16-பிப்-201811:29:15 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. முழு அதிகாரத்துடன் கூடிய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வரவேண்டும், முழு அணைகளும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து, நீர்மேலாண்மையை கையாள வேண்டும், தமிழகத்தின் பங்கு முழுமையாக கொடுக்கப்படுத்தல் வேண்டும்... டெல்டா மாவட்டம் பாலைவனம் ஆகிக்கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தி விவசாயிகளை காக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை