சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரசாயணத்துறை அமைச்சராக இருந்தவர் அழகிரி. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகனான இவருக்கு தற்போது வரையில் மத்திய அரசு சார்பில்போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு அளி்க்கப்ட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது.இருப்பினும் மாநில அரசின் சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.