மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா வசனம் : கமிஷனரிடம் புகார் | கமல் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட ரசிகர் | பிப்., 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு : கமல் | காவிரி தீர்ப்பு - தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் : ரஜினி | மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்..! | மோகன்லால் - மம்முட்டி போட்டா போட்டி | புருவ அழகி படத்துக்கு ரூ.2 கோடி டப்பிங் ரைட்ஸ் | மீண்டும் லாரி டிரைவராக நடிக்கும் மோகன்லால் | காயம்குளம் கொச்சுன்னி : மோகன்லால் லுக் வெளியானது..! | பிரியதர்ஷன் - அபிஷேக் படம் ஜூன் 5-ல் ஆரம்பம் |
சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண், தற்போது ஜனசேனா பார்ட்டி என்ற கட்சி தொடங்கியிருக்கிறார். அதோடு ஆந்திராவில் வரப்போகிற சட்டசபை தேர்தலில் தனது கட்சி சார்பில் தனித்து போட்டியிடவும் தயாராகி வருகிறார். ஆந்திராவில் அவர் பல பகுதிகளில் மக்கள் முன்பு தோன்றி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்து வரும் நடிகர் பாலகிருஷ்ணாவிடம், அடுத்த தேர்தலில் உங்கள் தொகுதியான அனந்தபூரில் போட்டியிட நடிகர் பவன்கல்யாண் தயாராகி வருகிறாரே. அது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
அதைக்கேட்டு கடும் கோபமடைந்த பாலகிருஷ்ணா, யார் அந்த பவன் கல்யாண். அப்படி யாரும் எனக்குத் தெரியாது என்று அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து வேகமாக சென்றுவிட்டாராம்.