மரத்தில் கார் மோதல்: கல்லூரி மாணவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரத்தில் கார் மோதல்: கல்லூரி மாணவர் பலி

Added : பிப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்செங்கோடு: சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த, தீவட்டிபட்டியைச் சேர்ந்த வையாபுரி மகன் பாலசுப்ரமணியன், 20; நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே, தனியார் பொறியியல் கல்லூரியில், இ.சி.இ., மூன்றாமாண்டு படித்து வந்தார். நேற்று, அரியர் தேர்வு எழுத, அண்ணா நகரில் உள்ள நண்பரின் அறையில் இருந்து, மதியம், 1:00 மணியளவில், வோக்ஸ்வேகன் காரில் கல்லூரிக்கு சென்றார். அதிவேகமாக சென்றவர், வரப்பாளையம் அருகே, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதினார். கார் அப்பளமாக நொறுங்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். காரின் இன்ஜின், 100 மீட்டர் தள்ளி, சாலை எதிர்ப்புறமாக விழுந்தது. திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை