SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோழவந்தான் சாலையோரத்தில் பட்டுப்போன தென்னை மரங்களால் விபத்து அபாயம்

2018-02-15@ 21:09:11

சோழவந்தான்: சோழவந்தான் பகுதியில் சாலையோரத்தில் பட்டுப்போய் உள்ள தென்னை மரங்களால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் திக் திக் பயத்தில் செல்கின்றனர். மதுரை மாவட்டம், சோழவந்தான்  பகுதியில் முக்கிய சாலையாக உள்ளது திருமங்கலம்- பள்ளப்பட்டி சாலை. இச்சாலை வழியாக திருமங்கலம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, அய்யம்பாளையம், பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ெசல்கின்றன. இச்சாலையில் ஓரத்தில் பல இடங்களில் தென்னை மரங்கள் பட்டுப் போய் உள்ளது. குறிப்பாக நாச்சிகுளம், கரட்டுப்பட்டி, திருவேடகம் காலனி உள்ளிட்ட பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட பட்டுப்போன தென்னை மரங்கள் சாலையோரத்தில் எப்போது விழுமோ எனும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,‘‘ கரட்டுப்பட்டி, நாச்சிகுளம், சோழவந்தான், தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால் உள்ளிட்ட ஊர்கள் அருகே சாலையோரத்தில் தென்னை மரங்களும் மழை காலத்தில் அவ்வப்போது முறிந்து விழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கரட்டுப்பட்டி- மேலக்கால் வரையிலும் சாலையோரத்தில் உள்ள பட்டுப்போன தென்னை மரங்களை அகற்ற வேண்டும்’’என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

  • CAmelWrestlingTurkey

    ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்