சமூக விரோத செயல்களை தடுக்க நாகர்கோவில் பூங்காவை சுற்றி கிரில் கேட்

2018-02-15@ 21:03:18

நாகர்கோவில்: நாகர்கோவில் பூங்கா சுற்றுசுவரை இடித்து விட்டு, முழுவதும் இரும்பு கம்பிகள் அமைக்கப்படுகிறது. நாகர்கோவில் நகரில் உள்ள ஒரு பொழுது போக்கு அம்சமாக தற்போது வேப்பமூடு பகுதியில் உள்ள பூங்கா அமைந்துள்ளது. நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்காவில் மிக் 21 ரக போர் விமானம் காட்சிக்கு உள்ளது. இது தவிர குழந்தைகள் விளையாடுவதற்காக இரும்பிலான ஊஞ்சல் உள்ளிட்ட சில உபகரணங்கள் உள்ளன. அவையும் முறையாக பராமரிப்பில்லாததால் குழந்தைகள் அதை மகிழ்ச்சியாக பயன்படுத்த முடியாது. ஓகி புயலில் சரிந்து விழுந்த மரங்கள், மின் கம்பத்தை கூட அகற்றாமல் போட்டுள்ளனர். இருப்பினும் பூங்காவுக்கு பொதுமக்கள் வருகை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பூங்காவில் பகல் வேளையில் பொதுமக்கள் போர்வையில் வரும் கும்பல் சில சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பூங்காவுக்குள் மறைமுகமாக உள்ள பகுதிக்கு சென்று மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற செயல்களும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இது தவிர சில காதல் ஜோடிகள் பொழுது போக்கிற்காக வந்து அமர்ந்து, அத்துமீறும் செய்கைகளில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதே போல் லெஸ்பியன், ஹோமோ செக்ஸ் போன்றவையும் பூங்காவுக்குள் நடந்து வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில் ஏற்கனவே பூங்காவின் ஒரு பகுதியில் சுற்று சுவரை இடித்து விட்டு இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த பகுதியில் அமர்ந்து இருப்பவர்களை சாலையில் செல்பவர்கள் பார்க்க முடியும். இது போன்று பூங்கா சுற்றுசுவர் முழுமையாக அகற்றப்பட்டு, இரும்பு கம்பிகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த பணிகளுக்காக சுற்றுசுவரை இடிக்கும் பணிகள் நேற்று நடந்தன. இரும்பு கம்பி வேலி அமைப்பதன் மூலம் பூங்காவுக்குள் உள்ள மக்கள் நடமாட்டம் வெளியே தெரியும் என்றும், இதன் மூலம் சமூக விரோத செயல்களை தடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பூங்கா பராமரிப்பு நகராட்சி வசம் வந்த பின்னர் தான் மிகவும் மோசமாக மாறி விட்டன. பொழுதுபோக்கு என்று கூறும் அளவுக்கு எதுவும் இல்லை. ராட்டினங்கள், இசை நீருற்று, ஒளி, ஒலி கூடம் போன்றவை முறையாக பராமரிக்கப்பட்டு வந்திருந்தால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருந்திருக்கும். கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னரும் எந்த வித வசதியும் நகராட்சி செய்து கொடுக்க வில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம் ஆகும் என்றனர்.
மேலும் செய்திகள்
ஆசிரியர் பயிற்சி தேர்வு : இன்று முதல் விடைத்தாள் நகல்
தொழில்நுட்ப பிரச்னை சீர் செய்யப்பட்டதால் ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை தொடங்கியது : 3 நாட்களில் 7875 பத்திரங்கள் பதிவு
ஷார்ஜா விமானத்தில் நூதன முறையில் ரூ.21 லட்சம் தங்கம் கடத்தல்
தீயில் கருகி 26 ஆடுகள் பரிதாப பலி
காரைக்காலில் நாளை மலர் கண்காட்சி துவக்கம்
கைதிகள் உழைப்பால் 45 நாட்களில் வேலூர் சிறை வளாகத்தில் 5 டன் காய்கறி உற்பத்தி
மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு
ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!
சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!
ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது
LatestNews
10-ம் வகுப்புக்கு 20-ம் தேதி முதல் செய்முறை தேர்வு
00:03
இலங்கை சிறையில் இருந்து 109 தமிழக மீனவர்கள் விடுதலை
20:53
ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
20:40
நிதியமைச்சர் அருண் ஜெட்லி- தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு
19:49
பெங்களூருவில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு
19:41
செனட் தேர்தல் விவகாரம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை
19:21