மாலே: மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், இவரது கட்சி எம்..பி.க்கள் 12 பேர் போர்க்கொடி தூக்கியதால் அரசியல் நெருக்கடி ஏற்படவே அவசர நிலையை பிரகடனப்படு்த்தினார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அதிபருக்கு எதிரான தீர்ப்பு வரவே தீர்ப்பை ஏற்க யாமீன் மறுத்தார்.
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பார்லியை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த ராணுவத்தினர் அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை தீவிரமாகவே எம்.பி.க்களை குண்டு கட்டாக தூக்கி பார்லி.க்கு வெளியே வீசி எறிந்தனர்.இதற்கிடையே ஐ.நா. பொதுச்செயலர் ஆன்டினோ கட்டாரஸ், மாலத்தீவில் நெருக்கடி நிலைமையை அதிபர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.