கைப்பையுடன் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் சென்ற பெண்!!

சீனாவின் கவுண்டாங் மாகாணத்தில் டாங்கவுண் என்ற மிகவும் பரபரப்பாக இயங்கும் புகையிரத நிலையத்தில் பயணிகளின் லக்கேஜ்கள், கைப்பைகளை சோதனை செய்வதற்கு எக்ஸ்ரே இயந்திரம் ஒன்று உள்ளது. இதில் தனது கைப்பையுடன் ஒரு பெண் தானும் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் சென்றுள்ளார்.

புகையிரத நிலையத்திற்கு வந்த பெண்ணின் கைப்பையை சோதனையிடுவதற்காக அவரது கைப்பையை அதிகாரிகள் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் அனுப்ப முயற்சித்துள்ளனர்.

ஆனால் அந்த பெண் தனது கைப் பையிற்குள் பணம் இருக்கின்றது, அதனை திருடிவிடுவார்கள் என கூறி கைப்பையுடன் தானும் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் சென்றுள்ளார்.

பொதிகள் சோதனை செய்யும் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் சென்ற பெண்!

இந்நிலையில் இயந்திரத்திற்குள் சென்ற இவரது உருவம் வந்து கொண்டிருந்ததால் அங்கே காத்திருந்த பயணிகள் பரிசோதனை இயந்திரத்தை பார்த்து பயந்துள்ளனர்.

வெளியே வந்த பெண்ணிடம் கேட்ட போது திருட்டு பயம், என் பையை அப்படியெல்லாம் தனியாக விட முடியாது என அசால்ட்டாக கூறியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
கூகுல் நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பமான எட்சென்ஸ் பயன்பாட்டுக்கு தமிழ் மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளது. கூகுல் நிறுவனம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி
பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரவுள்ளதாக அஸ்திரேலியப் பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய நிறுவனங்களில்
இந்திய மத்திய அரசாங்கத்தின் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 150 கோடி ரூபாவை ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*