வங்கி மோசடி: மத்திய அரசு மீது ராகுல் தாக்கு| Dinamalar

வங்கி மோசடி: மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (44)
Advertisement
PNBScam,  Nirav Modi, PNBFraudCase, பஞ்சாப் நேஷனல் வங்கி, காங்கிரஸ், மத்திய அரசு, ராகுல், பிரதமர் மோடி

புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி, மோசடி செய்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவை கொள்ளையடிக்க நிரவ் மோடியின் ஆலோசனைகள்

Powered by Vasanth & Co

1. பிரதமர் மோடியை கட்டிப்பிடி
2, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் மோடியுடன் இணைந்து காண வேண்டும்.
இதனை பயன்படுத்தி,
* 12 ஆயிரம் கோடியை திருடலாம்
* மல்லையா போல் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வேண்டும். அப்போது அரசு மாற்று வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


கேள்வி


காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், சுதந்திரத்திற்கு பின் நடந்த மிகப்பெரிய மோசடி இதுவாகும். பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் இந்த மோசடி குறித்து தெரிந்தும் அமைதியாக உள்ளனர். மோசடிக்கு யார் பொறுப்பேற்று கொள்வார்கள்.

சட்டத்தை மீறி நிரவ்மோடி வெளிநாடு தப்பி செல்லும் வகையில், தகவல் அளித்தது யார். இவருக்காக ஒட்டுமொத்த நிர்வாகமும் வேலை பார்த்தள்ளன. பிரதமர் மோடி மவுனத்தை கலைக்க வேண்டும். எவ்வளவுபணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


என்ன செய்தது


மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்த மோசடி 2011ல் கண்டுபிடிக்கப்பட்டது. 2014 வரை காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருந்தது என கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - Chennai,இந்தியா
15-பிப்-201817:02:29 IST Report Abuse
anand அட முட்டாளே வங்கி ஊழியர்கள் சேர்ந்து செய்து இருக்கிறார்கள்.. உங்களை போல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவில்லையே.. ஹர்சத் மெஹ்தா, 2g, நிலக்கரி, ஆதர்ஷ், விண்வெளி ஊழல் எல்லாம் இந்தியா சுதந்திரத்துக்கு முன்பு நடந்ததா?
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
15-பிப்-201817:00:13 IST Report Abuse
இடவை கண்ணன் பஞ்சாப் நேஷனல் பேங்க் - 11,000 கோடி சுவாஹாஹா மோடி ஒழிக மோடி ஒழிக என்ற கூச்சலை சிறிது நிறுத்திவிட்டு, சில நாட்களுக்கு முன் நமது பிரதமர் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சை திரும்பவும் கேட்டுப்பாருங்கள். கூடவே எழும் அந்த சூர்ப்பனகை சிரிப்பை ஒதுக்கி விட்டு அவரது பேச்சை மட்டும் கேட்டுப்பாருங்கள். இன்று நடந்துகொண்டிருக்கும் நிகழ்வை சுட்டிக்காட்டி இருப்பார். வங்கிகளின் வராக்கடன்களை பற்றி பேசும்போது அவர் சொல்லி இருப்பார். பொறுகிஸ்தான் நண்பர்களான காங்கிரஸ் ஆட்சியின் முடிவில் அந்த அரசால் சொல்லப்பட்டது வங்கிகளில் 36% வராக்கடன் என்று. ஆனால் உண்மை நிலவரம் 82% என்று சொல்லி இருப்பார். அதாவது அவர்கள் ஆட்சியில் கொடுக்கப்பட்ட வங்கி கடன்களில் 100 ரூபாய்க்கு 82 ருபாய் வராக்கடன். சென்ற ஆட்சியில் தொழிலதிபர்களுக்கு சரியான உத்திரவாதமில்லாமல் வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 52 லட்சம் கோடி. ஆம் 520,00,00,00,00,000 ருபாய். யாருடைய பணம். 52 லட்சம் கோடிகள் சாதாரண விஷயமில்லை நண்பர்களே ... இப்படி கொடுக்கப்பட்ட இந்த பணம்தான் இன்று இந்த அரசை எதிர்க்க பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அரசு எடுக்கும் எந்த முடிவையும் செயல்படுத்த முடியாமல் தடுக்க இந்த பணம் பயன்படுத்தப்படுகிறது. சென்ற அரசின் ஊழல்களை சேர்த்துப்பாருங்கள் நாம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டிய 15 லட்சம் சோனியா குடும்பம், ப சிதம்பரம் குடும்பம், மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் இவர்களிடம்தான் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
15-பிப்-201816:59:09 IST Report Abuse
GB.ரிஸ்வான் யானைக்கு ஒரு காலம் மோசடி மோடிகள் பூனைக்கு ஒருகாலம் மல்லையாக்கள் ... ஆக இரண்டுமே ஒன்னு.... திருடர்களை தப்பிக்க விடுபவர்களில் வல்லவர்கள்..
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
15-பிப்-201816:56:10 IST Report Abuse
இடவை கண்ணன் அரே பப்பு, இந்த நீரவ் மோடி யார் ஆட்சியில் கடன் பெற்றான்?.. எந்த வருடம் கடன் பெற்றான்....2013 வருட போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இவன் இடம் பெற்ற ரகசியத்தை நாட்டு மக்களுக்கு கொஞ்சம் சொல்லேன்...
Rate this:
Share this comment
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
15-பிப்-201817:08:38 IST Report Abuse
பாமரன்நடந்திருக்கறது பிராடுத்தனம்..... ஆரம்பிச்சது 2011 ல இந்த ஆள் ஓடி போகும் வரை நடந்துவிட்டு இருந்திருக்கு.......
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
15-பிப்-201816:54:14 IST Report Abuse
Narayan காங்கிரஸ் ஆட்சியில் செட்டியார் அவர்கள் குடுத்த பல லட்சம் கோடி கடன்களில் இதுவும் ஒன்று. சி பீ ஐ க்கு ஜனவரி கடைசியில் அதிகாரபூர்வ ரிப்போர்ட் வந்துள்ளது, உடனே ரைட் செய்து இந்த ஊழல் மீது நடவடிக்கை எடுக்கும் பாஜகவை பாராட்டாமல் பாஜகவை விமர்சிக்கும் மக்கள் மக்கள் அல்ல மாக்கள். அது போன்ற மாக்களுக்கு மோடி போன்ற நல்ல தலைமை பெற தகுதியே இல்லாதவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
15-பிப்-201816:54:01 IST Report Abuse
Siva சிவராத்திரி முடிந்து அமாவாசை.... மோடி ஜி அவர்கள் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்....நிதானம் போதும்... உலக மக்கள் மனதை வென்றார். இனி.............உள்ளுரில் குட்டையில் ஊறிய மட்டைகளை. எப்படி திருத்துவது.... அது தான் உங்களுக்கு மிக பெரிய சவால்......
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-201816:31:12 IST Report Abuse
ஆரூர் ரங் இந்திரா காலத்தில் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதே காங் கட்சிக்காரர்களுக்கு வேலையும் கடனும் கொடுக்கத்தான் .போகப்போக தேர்தல் நிதிக்கொடுக்கும் வணிகர்களுக்கு வாராக்கடன் கொடுக்கவும் பயன்பட்டது . இன்றும் பெரும்பாலான அரசு வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் பின்புலமுள்ளவர்கள் தான். எண்பதுகளில் திருபாய் அம்பானி மாபெரும் எல் அண்ட் டி கம்பெனியை முழுங்க இதே பஞ்சாப் நேஷனல் வங்கியைப் பயன்படுத்தியதும் (அதற்காக அந்த வங்கி நிர்வாகத்தலைவர் குடும்பத்துக்கு மறைமுகமாகக் கொடுத்த போலி கான்டிராக்ட்களும்) அதன் பின்புலத்தில் ராஜீவ் காந்தி இருந்ததும் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் ஆதாரங்களுடன் வெளியானது . பின்னர் பிரதமரான வி பி சிங் இதனையறிந்து அம்பானியை எல் அண்ட் டி யிலிருந்து ஓரம் கட்டியதும் வரலாறு .ஆகமொத்தம் நூறு மோடிகள் வந்தாலும் பொதுத்துறையில் நடந்த ஊழல்களை முழுவதுமாக ஆராய்ந்து தண்டித்தல் இயலாது ஏனெனில் அதிகாரவர்க்கம் வங்கி அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என எங்கெங்கும் காங்கிரசுக்கும் அதன் சார்புடைய தொழிலதிபர்களுக்கும் உளவாளிகளுண்டு அதுதான் இந்த மால்யா மற்றும் நீரவ் தப்பிக்க உதவியுள்ளது . இன்னும் எவ்வளவு UPA கால ஊழல் பூதங்கள் வெளிவருமோ தெரியாது
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
15-பிப்-201816:30:05 IST Report Abuse
இடவை கண்ணன் டேய் லூசு பப்பு.. இந்த ஊழல் நடந்ததே உங்க ஆட்சியிலதாண்டி... விஷயம் , விவரம் தெரியாம வான்டேடா வந்து வண்டியிலே ஏறுவதே உன் பிழைப்பாக இருக்கு...
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
15-பிப்-201816:29:11 IST Report Abuse
ganapati sb மோடி தனது ஜாதி மாநிலம் சார்ந்தவர் செய்த ஊழலையும் அம்பலப் படுத்தியுள்ளார் என்பது அவரின் நேர்மைக்கான நல்ல சான்று இந்த வருடம் முழுதும் ஊழல் செய்தவர்களை விலக்கி தூய்மை இந்தியாவை படைப்பார் என எதிர்பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
J sundarrajan - Coimbatore,இந்தியா
15-பிப்-201816:22:38 IST Report Abuse
J sundarrajan மோடியும் மத்திய அரசும் பொறுப்பு. உங்க ஆட்ச்சியில் நடந்த ஊழல்கள் இன்னமும் வெளியில் வந்து கொண்டிருக்கின்றன.உங்களுக்கும் உங்க கட்சியினருக்கும் வெட்கம் மானம் கொஞ்சமாவது உள்ளதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை