காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பிரசாரம்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (7)
Advertisement
காதலர் தினம், சைக்கிள் பிரசாரம்,  சிங்கம்புணரி,  சரவணன், இயற்கை விவசாயம், Valentines Day, bicycle campaign, Singapuneri, Saravanan, natural agriculture,

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை அடுத்த வலைச்சேரிபட்டியை சேர்ந்தவர் சரவணன். பிளஸ் 2 வரை படித்துவிட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர் காதலர் தினமான இன்று(பிப்.,14) அத்தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டார். தனது சைக்கிளில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைககளுடன் சொந்த ஊரில் இருந்து புறப்பட்ட அவர் சிங்கம்புணரி வழியாக பல்வேறு ஊர்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். வழியில் அவரை பெரும்பாலான மக்கள் வரவேற்று உபசரித்து அனுப்பிவைத்தனர். ஒரு சில இளைஞர்கள் அவரிடம் தகராறிலும் ஈடுபட்டனர்.

அவர் கூறியதாவது, நம் முன்னோர்கள் நமது கலாசார பண்பாடுகளை பாதுகாத்து தனிமனித ஒழுக்கத்துடனும், மனக்கட்டுப்பாட்டுடனும் வாழ்ந்து உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தனர். ஆனால் இன்று சில ஆணும், பெண்ணும் காதல் என்ற பெயரில் திருமணத்திற்கு முன்பே இணைந்து வாழ்ந்து கலாசார சீரழிவை எற்படுத்தி அடுத்த தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டியாக உள்ளார்கள். உலக காதலர் தினம் என்பது நமது நாட்டின் கலாசார பண்பாடுகளை சீரழிக்கும் தினமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பிப்.14 ம் தேதியை நமது பண்பாடு, கலாசார தினமாக அறிவித்து இளைய சமுதாயத்தைதவறான பாதைகளில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். நமக்கு அன்று உயிரை கொடுத்து சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள். பணம், பொருள் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது அவர்கள் வாங்கித் தந்த சுதந்திரத்தை அடகு வைப்பதற்கு சமம் என்றார். இவர் ஏற்கனவே மரம் வளர்ப்பது, மழை நீர் சேகரிப்பது, பணம், பொருள் வாங்காமல் வாக்களிப்பது, தூய்மை இயக்கம், மது, புகை எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KGSriraman -  ( Posted via: Dinamalar Android App )
14-பிப்-201821:00:36 IST Report Abuse
KGSriraman நாட்டையும். நமது கலாசார,,, பண்பாடுகளை, மதித்து, இவர் செய்யும், இந்த சைக்கிள். பிரசாரம்,,,பாராட்டத்தக்கது, இவரை பாராட்டி வாழ்த்துகிறேன்...... ஆம். இந்த காதலர் தினம் என்பது கொண்டாடக்கூடிய,, ஒரு நிகழ்வா???? தேவையில்லை!!! இன்றய காதல் வாழ்க்கை முறைக்கு ஏற்றது இல்லை,,, ஆம்,, படிக்கும் , போது. காதல் என்பது,,, போலி அதன் பெயர் காதல், அல்ல!! காமம்,,, காதல் படித்து முடித்து. தன் வாழ்க்கைக்கு ஏற்ற. ஒரு,, வேலையை, உண்டுசெய்து கொண்டு, குடும்பம் நடத்தும் அளவு, பொருள். சம்பாதித்து,,, தன் குடும்பத்திற்கு வேண்டிய கடமை களை, செய்து,,, அதன் பின் தன்னால். பிறர் தயவு இன்றி. வாழ் முடியும், ! என்ற நிலைக்கு வந்த பின்னர்,,, ஆணுக்கும். பெண்ணுக்கும்,, காதல் வரலாம்,, தன் காதலால்,, தன் குடும்பத்திற்கு,,,,அவமானம், ஏற்படும் ,, நிலையில் காதல் கூடாது... மொத்தத்தில். காதலர் தினம். என்ற. உண்டு. வேண்டாம்... இளம் வயதில்,,,, காதல் என்ற பெயரில்,, காம களியாட்டம் வேண்டாம்...
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201820:56:00 IST Report Abuse
GovindarajanThenkondar வேலன்டைன் என்பவர் ரோம் நகரிலிருந்து 96 கிலோ மீட்டர் துரத்தில் உள்ள #இந்தெர்மனா என்று பட்டணத்தில் வாழ்ந்தார் இவர் வாழ்ந்த காலத்தில் #கிளாடியஸ்_கோதிகஸ் என்ற அரசர் ரோமை ஆண்டு வந்தார் இவர் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்தார் இவர் ஆட்சி காலத்தில் வேலன்டைன் கிறிஸ்துவுக்கு உத்தமசாட்சியாய் வாழ்ந்து வந்தார் உபத்திரவபடுத்தபடும் கிறிஸ்தவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து வந்தார் கிளாடியஸ் கோதிகஸ் அரசர் தன் போர்சேவகர்கள் திருமணம் செய்யக் கூடாது என்றும் திருமணம் செய்யாமல் பெண்களிடம் பிரவேசிக்களாம் என்று சட்டம் கொண்டு வந்தான் இதை எதிர்த்த வேலன்டைன் முறையாக திருமணம் செய்து வாழ வேண்டும் என்றுச்சொல்லி போர்சேவகர்களுக்கு திருமணம் செய்துவைத்தார் இதனை அறிந்த கிளாடியஸ் கோதிகஸ் அரசர் வேலன்டைனை சிறையில் அடைத்தார் சிறையில் அடைக்கப்பட்ட வேலன்டைன் தன் உடன் சிறையில் இருந்த 46 நபர்களுக்கு இயேசுவை அறிவித்து ஞானஸ்நானம் கொடுத்தார் இந்த செய்தி கிளாடியஸ் கோதிகஸ் அரசர்க்கு அறிவிக்கபட்டது அரசர் வேலன்டைன்னை கிறிஸ்துவை மறுதலிக்கவும் ரோம தேவதைகளை வணக்கவும் கட்டளையிட்டான் வேலன்டைன் அதை ஏற்க மறுத்து அரசர்க்கு இயேசுவை அறிவிக்க முற்பட்டார் இதனால் கோபம் அடைந்த அரசர் வேலன்டைனை பிப்ரவரி 14 தேதி கொலை செய்தார் வேலன்டைன் பரிசுத்தமான திருமண உறவுதான் சரி என்றும் உறுதியான விசுவாசத்தின் நிமித்தமும் கிபி 270 பிப்ரவரி 14ல் மரித்தார் பிப்ரவரி 14 வேலன்டைன் கிறிஸ்துவின் அன்பிற்க்காய் அவருடைய பரிசுத்த கட்டளைக்காய் உயிர்விட்டு இரத்தசாட்சியாய் மரித்த நாளே ஆகும் மற்ப்படி இந்த நாளுக்கும் காதலர்களுக்கு எந்த சம்பந்தமேயில்லை கிறிஸ்தவர்களே பிப்ரவரி 14ல் காதலர் தினம் கொண்டாடி இந்த பரிசுத்தவான் வரலாற்றை கலங்கப்படுத்தாதீர்கள் - WhatsApp
Rate this:
Share this comment
Cancel
moorthisathya - salem  ( Posted via: Dinamalar Windows App )
14-பிப்-201820:06:27 IST Report Abuse
moorthisathya super sir
Rate this:
Share this comment
Cancel
திராவிட பகுத்தறிவு எதிரி - ஹிந்து தேசம்,இந்தியா
14-பிப்-201819:45:37 IST Report Abuse
திராவிட பகுத்தறிவு எதிரி வரவேற்கத்தக்க கருத்து
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-பிப்-201818:35:00 IST Report Abuse
Bhaskaran பகுத்தறிவாளர்களுக்கு காதலர் தினம் என்றால் பிடிக்கும் (அவர்கள் வீட்டுப்பெண்கள் வேறு சாதியினரை அதுவும் தங்கள் அந்தஸ்துக்கு குறைந்தவரை காதலிக்கும் வரை j
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
14-பிப்-201817:29:46 IST Report Abuse
anand பாராட்டுக்கள் நண்பரே
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-பிப்-201816:59:04 IST Report Abuse
A.George Alphonse "Thani Maram Thoppu Aagadhu" Things are changing day by day.We are now in electronic era.All are in possession of cell phones and lap top .In villages also nowadays we hardly see bicycles and all are only using modern high speed two wheelers and cars.In rural areas very hardly find huts or tiled house like olden days but all are living in higly furnished houses.It become fashion to youngers to move around with boys/girls fris like modern films and TV seriels on vehicles.Nowadays the western culture has become order of the day. Hardly some people who have more responsibilities and like to follow their ancestors simple walk of lives may follow as per this gentleman advises and maximum people won't follow this and only realised at the last age of their lives.Any my heartiest congratulations to this good hearted man for the improvement of the present generation by his bicycle journey.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை