நிதி சீர்திருத்தம் தொடர்பான மத்திய அரசின் மசோதாவுக்கு எதிராக மாபெரும் போராட்டம்: மம்தா அறிவிப்பு

2018-02-14@ 20:04:38

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில், கிருஷ்ணா நகரில் நடந்த கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
மத்திய அரசு நிதித்தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீடு எனும் மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. இந்த மசோதா சட்டமானால், மக்கள் வங்கியில் செலுத்திய பணத்துக்கு பாதுகாப்பு இருக்காது. மக்களின் பணத்தை மத்திய அரசு கொள்ளையடிக்க முயன்றால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். வங்கியில் இருக்கும் எங்களின் பணம் பாதுகாப்பாக இல்லை. வங்கியில் பணம் பாதுகாப்பாக இல்லாத போது, பக்கோடா எப்படி சாப்பிடமுடியும்?.
மாநிலத்தில் அடுத்து நடக்க இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவினர் சாதி, மத மோதல்களை தூண்டிவிடுவார்கள். மக்கள் மடிந்தாலும், வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டாலும், அவர்கள் கவலைப்படமாட்டார்கள். நாம் இந்துக்களாக இருந்தாலும், அனைத்து மதங்களுக்கும் சமமான முக்கியத்துவம், அளித்து மதிக்கிறோம். ஆதலால், பாஜகவிடம் இருந்து இந்துத்துவத்தை கற்றுக்கொள்ள தேவையில்லை. மேற்கு வங்கத்தில் நாங்கள் எப்படி அரசு நடத்துகிறோம் என்பதை பார்த்து மத்திய அரசு எங்களிடம் இருந்து கற்க வேண்டும்.
1300 கி.மீ தொலைவுக்கு கிராமத்தில் சாலைகள் அமைத்துள்ளோம். 25 லட்சம் வீடுகளை ஏழைகளுக்கு கட்டிக்கொடுத்துளோம். இலவச சுகாதாரத் திட்டத்தையும், ரூ.20க்கு அரிசியை கொள்முதல் செய்து கிலோ 2 ரூபாய்க்கு மக்களுக்கு கொடுக்கிறோம். அகதிகளுக்கும் 13 ஆயிரம் நிலப்பட்டாக்கள் வழங்கி இருக்கிறோம். இதுபோன்ற அரசை நாட்டில் எங்கும் பார்த்து இருக்க முடியாது. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
மேலும் செய்திகள்
ஆட்சியை பிடிப்பதற்காக சமூகத்தை பிளக்க பாஜ முயற்சி: திரிபுரா முதல்வர் குற்றச்சாட்டு
பேருந்து கட்டணத்தை உயர்த்த கேரள அமைச்சரவை ஒப்புதல்: குறைந்தபட்ச கட்டணம் ரூ.8ஆக நிர்ணயம்
ஆர்.எஸ்.எஸ். உதவியை அப்போதைய பிரதமர் நேரு நாடினார் : மத்திய அமைச்சர் உமாபாரதி
அரசு வேலை யாருக்கு என்பதை நிர்ணயிப்பதற்கு 'டாஸ்' போட்டு பார்த்த பஞ்சாப் அமைச்சரால் சர்ச்சை
இந்திய அரசை முகேஷ் அம்பானியால் 20 நாட்கள் நடத்தமுடியும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
மோடிகேர் திட்டத்தில் இருந்து மேற்குவங்கம் விலகல் : முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்
கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு
மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்
தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை
கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது
LatestNews
முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆண்டிவேல் திண்டுக்கல் அருகே வெட்டிக்கொலை
21:18
12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜி யாக பதவி உயர்த்த பரிந்துரை
21:14
திருச்செங்கோடு அருகே கார் மோதி விபத்து: 7 ம் வகுப்பு மாணவன் பலி
20:44
ஐஏஎஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு
19:52
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்
19:43
திண்டுக்கல் அருகே பணப் பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
19:30