டெல்லி: ராணுவ மூலதன கையகப்படுத்தல் திட்டத்திற்காக ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதிக்கியுள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளதால் ராணுவ தளவாடப்பொருட்கள் வாங்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.