நாமக்கல்: வேலை நிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு மற்றும் வடக்கு மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் கூறியுள்ளார். மேலும் மண்டல அளவிலான டெண்டர் அறிவித்தால் மட்டுமே ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்போம் என்றும் கூறியுள்ளார்.