தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் திரையுலகத்திலிருந்து புதிதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நுழைந்துள்ளார்கள். இருவருமே அவர்களது புதிய கட்சியைத் துவக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள்.
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இரு கட்டமாக அவரது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு நாளிலும் ரசிகர்கள் முன்னிலையில் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி நாளில் ஆன்மீக அரசியல் என்ற புதிய அரசியலை உருவாக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழம் வரை சென்று உரையாற்றி அவருடைய அரசியல் களம் வேறு என்பதைப் புரிய வைக்கும் முயற்சியில் இருக்கிறார். பிப்ரவரி 21ம் தேதி முதல் தன்னுடைய அரசியல் சுற்று பயணத்தை கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளார்.
ரஜினிகாந்தும் இப்போது அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல உள்ளார். நாளை(பிப்., 14) முதல் மூன்று நாட்களுக்கு அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு ரஜினிகாத் அவருடைய அடுத்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை ஏற்கும் மக்கள் முட்டாள் ரசிகர்கள் - நடுநிலையாளர்கள் ..
அப்போ ஊழல்வாதிகள், கொள்ளையர்கள், கொலைகாரர்கள், மதவாதிகள்,மணல் மாபியா,மெடிக்கல் மாபியா, மத சார்பற்ற ஜாதி தலைவர்கள்,ஜாதி சார்பற்ற மத போதகர்கள் என பல உத்தமர்களை தேர்தெடுத்த இந்த அதிபுத்திசாலிகள்,நடிகர்களை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை.
வெறும் மீம்ஸ் பார்த்து உலக நடப்பை தெரிந்து கொள்ளும் இவர்களுக்கு, திரையில் நடிப்பவர்களை விட நிஜத்தில் நடிப்பவர்கள் மீது அளவு கடந்த மோகம்..!
#FANSHARES
ரஜினியை திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, பாமக, சீமான், வேல்முருகன், கௌதமன், உதயகுமார், திருமுருகன் காந்தி, அமீர், பாரதிராஜா தற்போது சரத்குமார் என்று அனைவரும் போட்டி போட்டுக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
ரஜினி இன்னும் கட்சிப் பெயரைக் கூட அறிவிக்கவில்லை, அதற்குள் என்னமோ இதுவரை ரஜினி தான் தமிழகத்தை ஆட்சி செய்தது போலவும், தற்போது ஆட்சி செய்வது போலவும் அவரே அனைத்துக்கும் பொறுப்பு என்பது போல பேசி வருகிறார்கள்.
இதுவரை இருந்தவர்கள் என்ன செய்தார்கள், தற்போது இருப்பவர்கள் ஏன் செய்யவில்லை என்று கேட்க இவர்கள் எவருக்கும் தோன்றவில்லை.
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ரஜினியே முதலாக கருத்தை தெரிவிக்க வேண்டும் தீர்வு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
“ரஜினி ரஜினி ரஜினி” என்று தூங்கி எழுந்தது முதல் படுக்கப்போகும் வரை அவரையே தொடர்ச்சியாகத் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள்
கடந்த 20 வருடங்களாக பல கிரிமினல் வழக்குகள், இன்னும் பல ஊழல் வழக்குகள், கணக்கிட முடியாத சொத்து குவிப்பு, இவை எல்லாத்தையும் விட பல வருடங்கள் வெளிநாட்டில் தலைமறைவு - இப்படிப்பட்ட ஒருத்தர் MLA ஆகலாமா கூடாதுனு ஒரு நாள் கூட விவாதம் நடத்தாத ஊடங்கங்கள் இன்று ரஜினி வரலாமா வரக்கூடாதான்னு கொந்தளிக்கின்றன.. இவை எல்லாம் தமிழகத்தை பிடித்த சாபக்கேடு !!
67 வயதிலும் 500 கோடி போட்டு படம் எடுக்க ஆளுங்க இருக்காங்க. இது தான் ரஜினி அவர் தொழிலில் செய்த சாதனை..
பத்தாயிரம் ருபாய் வாங்கிட்டு ஒட்டு போட்டவர்களுக்கு, பல ஆயிரம் கோடி பேரம் பேசி ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறிய அயோக்கியர்களுக்கு இதெல்லாம் என்றும் புரியாது..
தமிழினத்திற்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத பாபா மற்றும் பாபா முத்திரையை முன்னெடுத்து தமிழ் மக்களை ஏமாற்றுகிறார் ரஜினி - இயக்குனர் கவுதமன்.
இது தான் தமிழினத்தின் அடையாளம், கலாச்சாரம் என்று வரையறுக்க இவர் 2000 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவரா? யார் தமிழர்களின் கடவுள்? கிறிஸ்துவா? திருமாலா? சிவனா? அல்லாவா? புத்தரா? இங்கு ஹிந்துக்கள் தர்கா செல்கின்றனர்.. கிறிஸ்துவர்கள் தீபாவளி கொண்டாடுகின்றனர்..
மதச்சார்பின்மைக்கு அடையாளமாக இருக்கும் இங்கு,இவர்கள் தான் தமிழர்கள் என வரையறுக்க இவர்கள் யார்? இது தான் தமிழ் பண்பாடு,கலாச்சாரம் என திணிக்க இவ்ரகள் யார் ?
உதயசூரியன், குக்கர் தமிழின முத்திரையா? MGR தொப்பி என்ன தமிழ் சமூதாயத்தின் பிரதிபலிப்பா? மூட நம்பிக்கையென்று சொல்லி பல தமிழ் திருவிழாக்களை திராவிட கட்சிகள் ஒழித்த போது ஏன் இந்த தமிழ் பற்று வரவில்லை? இந்த சமூதாயத்தில் காலம் காலமாக வழிபாட்டிலிருந்த பல காவல் தெய்வங்கள் காணாமல் போய்விட்டன.. இவருக்கு தமிழர்கள் வழிபட்ட எல்லா கடவுளும் தெரியுமா?
கொள்ளை,கொலையில் ஈடுபட்டவர்கள் அரசியலில் தினம் தினம் வரும்போது ஏற்று கொள்ளும் தமிழ் போராளிகள், இப்போது கொந்தளிப்பது ஏன்? ஒரு வேலை இவையெல்லாம் தான் தமிழ் கலாச்சாரமா?
கடவுள் வழிபாட்டில் கூட இனவெறியை புகுத்தும் இவர்களா தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறார்கள்? திடீரென்று வீறுகொண்டு செயல்படும் தமிழன்டா போராளிகளின் இனபற்றிக்குபின் ஒரு மதவாதமும் ஒளிந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது..!