இந்தியா - ஓமன் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து Dinamalar
பதிவு செய்த நாள் :
இந்தியா - ஓமன் இடையே
8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

மஸ்கட் : ராணுவம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்தியா - ஓமன் இடையே, எட்டு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.

India,இந்தியா


பிரதமர், நரேந்திர மோடி, வளைகுடா நாடுகளான, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு, அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பயணத்தின் கடைசி கட்டமாக, தற்போது, ஓமன் சென்றுள்ள மோடி, அந்நாட்டின் சுல்தான், கபூஸ் பின் சயத் அல் சயத்துடன், நேற்று பேச்சு நடத்தினார்.


இதன் பலனாக, ராணுவம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில், எட்டு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.இது குறித்து, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ரவீஸ் குமார், 'டுவிட்டரில்' கூறியதாவது:ஓமன் நாட்டுடனான நட்புறவை, மேலும் செம்மைப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான குழு நடத்திய பேச்சு, சுமுகமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது.


இரு தரப்பினரும், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, ராணுவம்,பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, பிராந்திய விவகாரங்கள் குறித்து, நீண்ட பேச்சு நடத்தினர். இதையடுத்து, எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ஓமன் சுல்தான் கபூஸ், ''கடினமாகவும், நேர்மையாகவும் உழைக்கும் இந்திய தொழிலாளர்களால், ஓமன் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது,'' என்றார்.ஓமனில், இரு நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ள, பிரதமர் மோடி, அந்நாட்டின் மூத்த அமைச்சர்களுடன் பேச்சு நடத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

முன்னதாக, ஓமன் தலைநகர், மஸ்கட்டில், சுல்தான் கபூஸ் விளையாட்டுஅரங்கில், இந்திய வம்சாவளியினர் மத்தியில், பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். அப்போது, ''இந்தியா - ஓமன் இடையிலான உறவு, எப்போதும் வலுவானதாக உள்ளது. இந்த உறவை மேலும் வலுப்படுத்த, ஓமனில் உள்ள இந்திய வம்சாவளியினர் பெரிதும் உதவி வருகின்றனர்,'' என்றார்.

மஸ்கட்டில், 125 ஆண்டுகள் பழமையான, ஆதி மோதீஸ்வர் மஹாதேவ் சிவன் கோவில் உள்ளது. அக்கோவிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.

தொழில் துறையினருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஓமனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பிரதமர் மோடி, மஸ்கட்டில், நேற்று நடந்த, இந்தியா - ஓமன் தொழில் துறை மாநாட்டின் போது, வளைகுடா மற்றும் மேற்காசிய நாடுகளின் தொழில் துறையினரை சந்தித்து பேசினார். அப்போது, ''தொழில் துவங்க சரியான நாடு, இந்தியா,'' என்றார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement