திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் முடிந்து கடந்த ஜனவரி 21ம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 5 மணியளவில் கோயில் தந்திரி கண்டரர் மகேஸ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோயில் நடையை திறந்து தீபாராதனை நடத்துவார். இன்று வேறு பூஜைகள் நடக்காது.
நாளை முதல் 17ம் தேதி வரை கணபதி ஹோமம், புஷ்பாபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. தினமும் காலை 5.15 மணி முதல் 11 மணி வரை நெய்யபிஷேகம் நடக்கிறது. 17ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அத்துடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும்.