பெருங்களத்தூர் ரயில்வே மேம்பால பணியை முடிக்க கோரி ஆர்ப்பாட்டம்

2018-02-12@ 00:11:08

தாம்பரம்: சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் கடந்த  7 ஆண்டுகளுக்கு மேலாக ரயில்வே மேம்பாலம் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  
எனவே, கிடப்பில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக கட்டி முடிக்கவேண்டும் என தமிழக அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையை வலியுறுத்தி சிவசேனா கட்சி சார்பில் நேற்று காலை பெருங்களத்தூர் இந்திரா காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • simlasnow

    சிம்லாவில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • 13-02-2018

    13-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • worldstallesthotel

    உலகின் மிக உயரமான ஓட்டல் துபாயில் இன்று திறப்பு

  • OrangeFestivalItaly

    இத்தாலியில் ஆரஞ்சுத் திருவிழா: ஆரஞ்சுப் பழங்களை எறிந்து மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • loversday18

    காதலர் தினம் கொண்டாட விற்பனைக்கு குவிந்த பரிசு பொருட்கள்

LatestNews