சட்டசபையில் ஜெ., உருவப்படம் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சட்டசபையில் ஜெ., உருவப்படம் திறப்பு:
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை : முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் உருவப்படம், தமிழக சட்டசபையில், நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை, தி.மு.க., - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா


ஜெ., மறைவுக்கு பின், முதல்வராக பொறுப்பேற்ற பழனிசாமி,பிரதமர் மோடியைசந்திக்க டில்லி சென்ற போது, சட்டசபையில், ஜெ., உருவப்படத்தை திறந்து வைக்க கோரிக்கை விடுத்தார்.

பச்சை நிற உடை


ஆனால், அரசியல் சூழல் காரணமாக, இந்த கோரிக்கையை, மோடி ஏற்கவில்லை. இந்நிலையில், ஜெ., உருவப்படத்தை, தலைமை செயலக வளாகத்தில் உள்ள, சட்டசபையில் திறந்து வைக்க, தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது.

அதன்படி, சட்டசபையில் நேற்று காலை, 9:30 மணிக்கு விழா துவங்கியது. இதற்காக, சபாநாயகர் இருக்கை அகற்றப்பட்டு, அங்கு, நிகழ்ச்சி மேடை அமைக்கப்பட்டிருந்தது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர்,பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர், ஜெயராமன் ஆகியோர் பேசினர்.



பின், ஜெ., உருவப்படத்தை, சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். சட்டசபையில், சபாநாயகர் இருக்கைக்கு வலது புறத்தில், உருவப்படம் மாட்டப்பட்டு உள்ளது. பச்சை நிற உடையில் காணப்படும், ஜெ., உருவப்படத்தின் கீழ், 'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

ஜெ., உருவப்படத்தை வரைந்து தந்த, ஓவியக் கல்லுாரி பேராசிரியர், மதியழகனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன்,நிதித் துறை செயலர், சண்முகம் உள்ளிட்ட மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்; தமிழக, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா


மலர் அலங்காரம்


மேலும், அ.தி.மு.க., அவைத் தலைவர், மதுசூதனன், முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட ஆளுங்கட்சி பிரமுகர்கள், ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள்; முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் வாரிய தலைவர்களும் பங்கேற்றனர்.

ஜெ., உருவப்படம் திறக்க, எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு, அரசு செவி சாய்க்காததால், படத்திறப்பு விழாவை, தி.மு.க., - காங்., புறக்கணித்தன.

Advertisement

சுயேச்சை, எம்.எல்.ஏ.,க்கள், தினகரன், தமிமுன் அன்சாரி ஆகியோர் பங்கேற்கவில்லை; கருணாஸ் பங்கேற்றார். ஜெ., உருவப்பட திறப்பையொட்டி, சட்டசபையில், கண்ணை பறிக்கும் விதத்தில், பல்வேறு வண்ணங்களில், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தலைமை செயலகம் மற்றும் கடற்கரை சாலையில், ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

'பிரதமர் ஏன் வரவில்லை'


தமிழக சட்டசபையில், ஜெ., உருவப்படம் நேற்று திறக்கப்பட்டட நிலையில், அறிவாலயத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர், உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.

குட்காவை சபையில் காண்பிக்கும் போது, சபை மீறல் எனக் கூறி, எங்கள் மீது, சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார். தற்போது அவரே, ஜெ., உருவப்படத்தை திறந்து, சபையின் மரபை மீறியுள்ளார். இது தொடர்பாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில், ஜெ., படம் வைப்பது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அவசர அவசரமாக, சட்டசபையில், ஜெ., உருவப்படம் திறக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.ஜெ., உருவப்படத் திறப்பு விவகாரத்தில், நாங்கள் அரசியல் செய்யவில்லை; அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவிற்கு, பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வராதது ஏன் என்பதற்கு, அமைச்சர் ஜெயகுமார் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (19+ 132)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
13-பிப்-201810:35:55 IST Report Abuse

A.Gomathinayagamஊழல் வாதிகள் அவர்கள் தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
13-பிப்-201810:00:54 IST Report Abuse

கைப்புள்ளமம்மிஜி இருந்தால் சோறு திங்க கூட பயப்படும் ஜந்துக்கள் எல்லாம் இன்றைக்கு தலை எடுத்து ஆடுவதையும் பல்லு போட்டு பேசுவதையும் பார்க்கும் போது, பேசாமல் மம்மிஜி மறக்கடிக்கப்படுவதே சிறந்தது என்பது எனது கருத்து. ஆனால் கண்டிப்பாக மஞ்சளை ஒரு டயனோசர் காலம் ஆனாலும் மக்கள் மறக்கவே கூடாது. எப்படி இன்றும் கூட டயனோசரை பற்றி பேசுகிறோமோ அதே போல மஞ்சளை பற்றியும் பல ஆயிரம் வருடங்கள் மண்டைக்குள் ஓடி கொண்டே இருக்க வேண்டும்.

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
13-பிப்-201809:57:19 IST Report Abuse

கைப்புள்ளஎன்னை பொறுத்தவரை மம்மிஜியை இத்தோடு விட்டு விட வேண்டுமென்றே விரும்புகிறேன். மம்மிஜி தனது வாழ்க்கை முழுதும் நயவஞ்சக நரிகள் சூழ்ந்த காலத்திலேயே சிங்கம் போல வாழ்ந்து சிங்கமாகவே மறைந்து விட்டார். ஒரு ஆம்பளையால் கூட பல நூறு சகுனிகள் சூழ்ந்து நிக்க அனைத்தையும் சமாளித்து வெற்றிகரமாக வாழ்வது முடியாது. அப்படிப்பட்ட மம்மிஜியை மறைந்த பின் விட்டுவிட்டு மறந்து விட வேண்டும் என்றே நான் ஆசை படுகிறேன்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-பிப்-201808:52:00 IST Report Abuse

Srinivasan Kannaiyaஊரை ஏய்ப்பவன் உத்தமன் போல ..கோயிலை பிடிப்பவன் வள்ளலை போல வாழ்கிறான்,.,,பலநாள் திருடன் ஒரு நாள் சிறையில் ...பாவம் செய்தவன் பரம்பரை வழியில் பார்க்கின்றேன்... சதிகார கூட்டம் ஒன்று சபை எற கண்டேன்...

Rate this:
BJRaman - Chennai,இந்தியா
13-பிப்-201808:02:43 IST Report Abuse

BJRamanஎது எப்படியோ, அ.தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியின் படம் நீக்கப்பட்டது போல, ஒருசமயம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் படமும் நீக்கப்படலாம் நிரந்தரமாக , அ.தி.மு.க. ஆட்சி வர வாய்ப்பு இல்லை.அதனால் படமும் வர வாய்ப்பு இல்லை

Rate this:
Appan - London,யுனைடெட் கிங்டம்
13-பிப்-201807:56:51 IST Report Abuse

Appanமக்களுக்கு புத்தி பேதலித்து விட்டது...இப்படித்தான் காங்கிரஸ் , கிரிக்கட் வீரர் சச்சினுக்கு பரத் ரத்னா விருது கொடுத்து கவுரவித்தது...அது போல் தமிழர்கள் ஒரு குற்றவாளியின் படத்தை சட்டசபையில் திறந்து , கொள்ளை அடிப்பத்தை அதாவது ஒழுக்கம் இல்லாமல் இருப்பதை போற்றும் சமூகம் ஆகிவிட்டது.. அதிமுக கட்சியே அரசு பணத்தை கொள்ளை அடித்து கட்சி காரர்களுக்கு கொடுக்கும் கட்சி ஆகிவிட்டது... இல்லை என்றால் இப்போ இருக்கிற நிதி நெருக்கடியில் 200 கோடியில் இருசக்கர வண்டி கொடுப்பார்களா..?. நாட்டிற்கு எது முக்கியம் இன்றி இல்லாமல் எதில் அதிகம் பணம் பண்ணலாம் என்று அதிமுக செயல் படுகிறது..இவர்கள் இப்படித்தான் நடப்பார்கள்..

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-201807:10:51 IST Report Abuse

ஆரூர் ரங்சட்டசபையில் உறுப்பினராகவே இருந்திராதவர்களின் படங்கள் இருக்கும்போது ஆறுமுறை உறுப்பினராக இருந்தவரின் படமும் இருப்பது ஒன்றும் மோசமில்லை. முக்கியமாக சுதந்திரத்தை கருப்பு நாளாகக் கொண்டாடியவர் தமிழை காட்டுமிராண்டி பாஷை என சொன்னவர் பாவாடை நாடா அசிங்கத்துக்கு விளக்கவுரை சப்பைக்கட்டு கட்டியவர் ஆகியோர் 1100 %சுத்த சுயம்பிரகாச கிரிமினல்களை வெளியேற்றிவிட்டால் சட்டசபையே காற்றாடலாம்

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-201807:07:30 IST Report Abuse

ஆரூர் ரங்உத்தமர்கள் உத்தமர்களுக்கே வாக்களித்திருப்பார்கள். வழக்குக்கள் இருந்தபோதும் ஐந்துமுறை உத்தமர் என நினைத்தே தானே தேர்ந்தெடுத்தார்கள்? இது நாம் விருப்பி ஏற்ற தண்டனையை அனுபவிப்போம். ( ஒரே மகிழ்ச்சி .இனி சட்டசபையில் சுடாலின் ஜெயா படத்தைப் பார்த்தவாறே தான் உட்காரமுடியும். பேசவும் முடியும் .நல்ல தண்டனை)

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
13-பிப்-201810:17:58 IST Report Abuse

பாமரன்அல்பை.... அல்பை .........

Rate this:
Amirthalingam Sinniah - toronto,கனடா
13-பிப்-201806:08:16 IST Report Abuse

Amirthalingam SinniahOps,EPs சிறைசாலையில் இரு ப் பவர் களையும் கௌரவிப்பார்கள் போலும்.

Rate this:
kailawsh - Pollachi,இந்தியா
13-பிப்-201806:00:26 IST Report Abuse

kailawsh" எனது படத்தைத் திறக்க இதோ இந்த கொதிக்கும் எண்ணையில் முக்கி எடுத்த முகம்தான் கிடைத்ததா வெட்கம் வேதனை. வேதனை மேல் வேதனை "

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement