Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை வியாபாரம் செய்ய முயற்சித்தார் : அமலாபால்

12 பிப், 2018 - 10:32 IST
எழுத்தின் அளவு:
That-man-try-to-sale-me-says-Amalapaul

மலேசியாவில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்காக சென்னை தி.நகரில் உள்ள நடன இயக்குனர் ஸ்ரீதரின் ஸ்டூடியோவில் அமலாபால் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த தொழில் அதிபர் அழகேசன் என்பவர், அமலாபாலுக்கு பாலியல் ரீதியான டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமலாபால் மேற்கு மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று அவர் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அழகேசன் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

அமலாபாலின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார் அமலாபால். அதில், அவர் "நன்றி விஷால், இது ஒவ்வொரு பெண்ணின் கடமை. இதுபோல் பாலியல் ரீதியாக துன்புறுத்தும்போது அதை பெண்கள் சகித்துக் கொள்ளக்கூடாது. அதை எதிர்த்து போராட வேண்டும். அந்த நபர் (தொழிலதிபர் அழகேசன்) என்னை மாமிசத் துண்டைப்போல வியாபாரம் செய்ய நினைத்தார். அவர் அங்கு வந்ததும், இதுபோன்ற பேச்சும் எனக்கு கடும் எரிச்சலை தந்தது" என்று குறிப்பிட்டுள்ளார் அமலாபால்.

Advertisement
காலா - பாட்ஷா ஒரு ஒப்பீடுகாலா - பாட்ஷா ஒரு ஒப்பீடு காலா சண்டைக்காட்சி லீக் : படக்குழு அதிர்ச்சி காலா சண்டைக்காட்சி லீக் : படக்குழு ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in