4,200 காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் ஓடாது

2018-02-12@ 00:11:49

நாமக்கல்: தமிழகம், ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் சமையல் எரிவாயு ஏற்றிச்செல்லும் பணியில் 4200 காஸ் டேங்கர் லாரிகள் ஈடுபடுகின்றன. ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ள அடுத்த 5 ஆண்டுக்கான புதிய வாடகை டெண்டரில் இடம்பெற்றுள்ள பல்வேறு நிபந்தனைகளை எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, இன்று(12ம் தேதி) முதல் 4200 டேங்கர் லாரிகளையும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்போவதாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் நேற்று முன்தினம் நாமக்கல்லில் அறிவித்தார். அதன்படி, இன்று காலை 8 மணி முதல் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்குகிறது. இதனால், 6 மாநிலங்களிலும் விரைவில் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
  • KabalishwarartempleShiv

    மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

  • MuscatShivatempleModi

    மஸ்கட்டில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

  • RoseMondayCarnivalGermany

    ஜெர்மனியில் ரோஜ் மன்டே கார்னிவல் திருவிழா: தலைவர்களின் உருவ பொம்மைகளை கேலிக்கையாக சித்தரித்து அணிவகுப்பு

  • FranceSnowEieffel

    அதிகரித்த பனிப்பொழிவால் பிரான்ஸின் அடையாளமாக திகழும் ஈஃபில் கோபுரம் மூடல்!

  • SpringFestivaChina

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உற்சாகமாக தயாராகி வரும் சீனா: ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு

LatestNews