'அம்மா' ஸ்கூட்டர் மானியம் துவங்கியாச்சு சிபாரிசு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அம்மா ஸ்கூட்டர் , மானியம், கமிஷன், சிபாரிசு, அரசியல்வாதிகள்

'அம்மா' ஸ்கூட்டர் மானியம் பெற, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் முடிந்த நிலையில்,சிபாரிசும் துவங்கி விட்டது. ஆளுக்கு, 5,000 ரூபாய் என பேசி, 'கமிஷன்' அள்ளுவதில் அரசியல்வாதிகளை மிஞ்ச ஆளில்லை என, நிரூபிக்க துவங்கி விட்டனர். மானியம் பெற முண்டியடிக்கும் மக்களால், அதிகாரிகளும் கலக்கம் அடைந்து உள்ளனர்.

அம்மா ஸ்கூட்டர் , மானியம், கமிஷன், சிபாரிசு, அரசியல்வாதிகள்


அறிவிப்பு


தமிழகம் முழுவதும், பணிபுரியும் பெண்களுக்கு, இருசக்கர வாகனம் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில், இந்த ஆண்டு, ஒரு லட்சம் பெண்களுக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.ஜெ., பிறந்த நாளான, பிப்., 24ல், திட்டம் துவக்கப்பட உள்ளது.

பயனாளிகளை தேர்வு செய்வதற்காக, மாவட்டந்தோறும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தனியார், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், 2.50 லட்சம் ரூபாய்க்கு குறைவாக, ஆண்டு வருமானம் பெறுவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வாங்கப்பட்டன. முதலில், 'பிப்., 5 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.
பின், பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நேற்று வரை நீட்டிக்கப்பட்டது.நேற்று வரை, தமிழகம் முழுவதும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், இருசக்கர மானியம் பெற விண்ணப்பித்து உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், எதிர்பார்த்ததை விட, அதிக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இவற்றை பரிசீலனை செய்து, பயனாளிகளை தேர்வு செய்ய, சென்னையில், மாநகராட்சி கமிஷனர் தலைமையிலும், மாவட்டங்களில், கலெக்டர்கள் தலைமையிலும், குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

Advertisement

கள ஆய்வு


இக்குழுவில், மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். குழுவினர், கள ஆய்வுக்கு பின், தகுதியான விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும்.
இதற்கிடையில், இருசக்கர வாகனத்திற்கு மானியம் பெற்றுத் தருவதாகக் கூறி, உள்ளூர் அரசியல் புள்ளிகள், 'கமிஷன்' வசூலிக்க துவங்கி உள்ளனர். மானியத் தொகை, 25 ஆயிரம் பெற, 5,000 ரூபாய் என, வசூல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
மாவட்டச் செயலர், நகரச் செயலர், ஒன்றியச் செயலர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேரம் பேச துவங்கி உள்ளனர். பெண்களும், 25 ஆயிரம் ரூபாயில், 5,000 போனால் பரவாயில்லை எனக் கருதி, அரசியல்வாதிகளை நம்பி, பணம் கொடுக்கத் துவங்கி உள்ளனர்.
கட்சியினரிடமிருந்து வரும் சிபாரிசு, முண்டியடிக்கும் மக்கள் ஆகியவற்றால், பயனாளிகளை தேர்வு செய்வது எப்படி எனத் தெரியாமல், அதிகாரிகள் கலக்கமடைந்து உள்ளனர்.- நமது நிருபர்


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
11-பிப்-201815:31:00 IST Report Abuse

அம்பி ஐயர்காரில் வந்து ஸ்கூட்டர் மானியத்துக்கு விண்ணப்பித்துச் செல்கிறார்கள்.... மானியத்தையே முற்றிலும் ஒழிக்க வேண்டும்...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11-பிப்-201815:19:10 IST Report Abuse

Endrum Indianஎப்படியெல்லாம் கமிஷன், எதிலெல்லாம் கமிஷன் இது தான் இந்த திராவிட டாஸ்மாக் அரசு அகில உலகத்திற்கு வழிகாட்டி சொல்லிக்கொடுக்கின்றது. இப்போ புதுசா ஸ்கூட்டர் கமிஷன்.

Rate this:
christ - chennai,இந்தியா
11-பிப்-201814:35:08 IST Report Abuse

christஇவனுக அரசியல் வண்டி ஓட்டுவதற்கு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது

Rate this:
bal - chennai,இந்தியா
11-பிப்-201811:42:11 IST Report Abuse

balமுதலில் இந்த இலவச மற்றும் மானிய திட்டங்களை தடை செய்ய வேண்டும். இல்லை என்றால் இது மாதிரி ஊழல் நடக்கத்தான் செய்யும். கடை காரர்களே பினாமி பேரில் வாங்கி அதிக விலைக்கு விற்பார்கள் பினாமி பெயரில்.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-பிப்-201810:34:14 IST Report Abuse

Malick Rajaதேர்தல் கைக்கூலிக்கு முன்பணம் போல ஸ்கூட்டர் விநியோகிக்கப்படுகிறது .. செல்லாதவூர் ராஜு சொன்னது போல அதிமுக அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் முன்னுரிமை என்பது உலகறிந்த உண்மை .. காலம் காணாது இருக்கும் ஆனால் ஸ்கூட்டர் வழங்குபவர்கள் அதன் பயனை அடையவே முடியாது என்பதுமட்டுமே உண்மை

Rate this:
rajan - kerala,இந்தியா
11-பிப்-201810:10:19 IST Report Abuse

rajanஇந்த அரசியல் பன்னாடைகள் LLR வைத்தும் விண்ணப்பம் கொடுக்கலாம்னு கட்டம் போட்டானுங்க பாரு. அத்தனை விண்ணப்பதாரர்களிடமும் மானியத்தை காட்டி ஓட்டு பிரிக்க திட்டம் போடுறாங்க. இது இன்னோரு வகை ஸ்கூட்டர் டோக்கன் வித்தை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இதிலும் போயி இந்த மொள்ளமாரீங்க 5000 முன் பணத்துக்கு போடுற ஆட்டை அவலம் தான் தாங்க முடியல்ல இதுக நடத்துற இந்த கூத்து தான் அந்த அம்மா வழி ஆட்சி ஊழல் ஆட்சி முறை. லஞ்சம் கொடுத்து தான் இந்த மானியம் பெற வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். வாழ்க ஊழல்.

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-பிப்-201810:09:29 IST Report Abuse

D.Ambujavalliஆண்டுக்கணக்காக நிலுவையில் உள்ள ஓய்வூதியர்களுக்குக் கொடுக்க 'மனம் உண்டு, பணம் இல்லை' மின்துறைக்கு கடன் பாக்கி, பஸ்கள் அடமானம் இந்த அழகில் ஸ்கூட்டர் மானியமாம் எந்த வகையில் கல்லா கட்டலாம் என்று ஏதேதோ செய்கிறார்கள் எந்தகம்பெனியுடன்'பேரம்' முடிந்திருக்கிறதோ ?

Rate this:
Natarajan Ramanathan - chennai,இந்தியா
11-பிப்-201809:12:21 IST Report Abuse

Natarajan Ramanathanதிருடனை ஆட்சியில் வைக்காதே.. இனி திராவிட திருடனை ஆட்சியில் வைக்காதே. வைத்தால் தமிழ்நாடு நாசமாய் போய்விடும்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-பிப்-201809:07:30 IST Report Abuse

Srinivasan Kannaiyaசூடு சொரணையற்ற சொண்டி சோறுகள்.... இதிலும் பணம் பண்ண காய்ந்து கிடக்குதுங்கள்..

Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
11-பிப்-201808:41:28 IST Report Abuse

Loganathan Kuttuvaஸ்குட்டரில் பயணம் செய்வதற்கு பெட்ரோலுக்கு பணம் வேண்டுமே,

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-பிப்-201817:14:56 IST Report Abuse

தமிழ்வேல் அதுக்குள்ளே காயலான் கடைக்குப் போயிடும்.....

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement