Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகும் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம்

10 பிப், 2018 - 10:48 IST
எழுத்தின் அளவு:
Maniratnams-Chekka-Chivantha-Vaanam-to-be-release-in-Telugu-and-Hindi

காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. தற்போது அவரது அடுத்த படம் பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு செக்கச்சிவந்த வானம். தெலுங்கு மற்றும் இந்தியில் நவாப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூரலிகான், ஜெயசுதா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் பகத்பாசில் நடிப்பதாக இருந்தது தற்போது அவருக்கு பதிலாக அரவிந்த்சாமி சேர்க்கப்பட்டுள்ளார்.

மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். திலீப் சுப்பாராயன் சண்டை காட்சிகளை அமைக்கிறார் கதை, திரைக்கதை, வசனத்தை சிவா ஆனந்துடன் இணைந்து மணிரத்னம் எழுதியிருக்கிறார். திங்கள் கிழமை இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Advertisement
தமிழ் படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு எதிர்ப்பு: போலீசில் புகார்தமிழ் படத்தில் நடிக்க சன்னி ... திருமண வதந்தியில் சிக்கிய விஜய் சேதுபதி படநாயகி திருமண வதந்தியில் சிக்கிய விஜய் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in