பாலஸ்தீனம் இறையாண்மையுள்ள சுதந்திர நாடாகும் Dinamalar
பதிவு செய்த நாள் :
நம்பிக்கை!
பாலஸ்தீனம் இறையாண்மையுள்ள சுதந்திர நாடாகும்  
அமைதியான வழியில் தீர்வு காணலாம் என்கிறார் மோடி

ரமல்லா : பாலஸ்தீனம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம், இஸ்ரேலுடனான பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உதவும்படி, அந்த நாட்டு அதிபர் மஹ்மூது அப்பாஸ் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, ''பேச்சுவார்த்தை மூலம், அமைதியான சூழலில், பாலஸ்தீனம் விரைவில் சுதந்திர நாடாகும்,'' என, பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாலஸ்தீனம் இறையாண்மையுள்ள சுதந்திர நாடாகும்


மேற்காசியாவின், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளுக்கு, மூன்று நாள் பயணமாக, பிரதமர் மோடி, நேற்று முன்தினம், டில்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார். பாலஸ்தீனம் செல்லும் வழியில், ஜோர்டான் தலைநகர் அம்மானில் இறங்கினார். அவரை, அந்நாட்டு பிரதமர், ஹனி அல்-முல்கி வரவேற்றார். தொடர்ந்து, ஜோர்டான் மன்னர், இரண்டாம் அப்துல்லாவை சந்தித்து பேசினார்.

5 ஒப்பந்தங்கள்


நேற்று காலை ஜோர்டானிலிருந்து, அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டரில், பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி சென்றார். பாலஸ்தீன தலைநகர் ரமல்லாவில், பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர், ரமி ஹம்தல்லா வரவேற்றார்.

தொடர்ந்து, ரமல்லாவில் உள்ள அதிபர் மாளிகைக்கு, மோடி சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை, பாலஸ்தீன அதிபர், மஹ்மூது அப்பாஸ் வரவேற்றார். இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.



தொடர்ந்து, இரு தலைவர்களும், இரு தரப்பு உறவுகள் பற்றி பேசினர். இரு நாடுகளுக்கு இடையே, 320 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பாலஸ்தீனத்தில், பெயிட் சாகுர் பகுதியில், 190 கோடி ரூபாய் செலவில், அதி நவீன மருத்துவ மனை கட்டுவது உட்பட, ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின், பிரதமர் மோடியும், முகமது அப்பாசும், நிருபர்களை சந்தித்தனர்.


அப்போது, பாலஸ்தீன அதிபர், அப்பாஸ் கூறியதாவது:பாலஸ்தீனத்துக்கு வந்துள்ள, முதல் இந்திய பிரதமரான மோடியை வரவேற்பதில், மகிழ்ச்சியடைகிறேன். பாலஸ்தீனத்தில் அமைதி நிலவ, இந்தியா எப்போதும் துணை நிற்கிறது. இங்கு அமைதி தொடர்ந்து நிலவ, பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார் என, ஏற்கனவேகூறியுள்ளோம்.

இந்த விவகாரத்தில், சர்வதேச அளவில், இந்தியா ஆக்கப்பூர்வமாக பணியாற்றும் என, நம்புகிறேன். இஸ்ரேலுடனான பிரச்னைக்கு, சுமுக தீர்வு ஏற்பட, இந்தியா, எங்களுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, பிரதமர் மோடி கூறியதாவது: இந்தப் பயணம், வரலாற்று சிறப்பு மிக்கது; இது, இந்திய - பாலஸ்தீன உறவை, மேலும் வலுப்படுத்தும். பாலஸ்தீன மக்களின் நலனில், இந்தியா எப்போதும் அக்கறை வைத்துள்ளது. இந்த பகுதியில், அமைதி தொடர்ந்து நிலவ வேண்டும் என, இந்தியா விரும்புகிறது. அதற்கான முயற்சியில், நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

இந்திய வெளியுறவு கொள்கையில், பாலஸ்தீனத்திற்கு எப்பொழுதும் உயரிய இடம் வழங்கப்பட்டு உள்ளது. பாலஸ்தீனம் விரைவில் அமைதியான முறையில், சுதந்திர நாடாகி விடும்.

Advertisement

நீண்ட கால உறவு



பேச்சு மூலம், இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான உறவுகள், நீண்ட காலம் வரை நிலைத்து நின்றுள்ளன.இவ்வாறு மோடி கூறினார். முன்னதாக பிரதமர் மோடி, பாலஸ்தீன தலைவர், யாசர் அராபத்தின் சமாதிக்கு சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், பாலஸ்தீன அதிபர், அப்பாசும் சென்றிருந்தார்.

தொடர்ந்து, யாசர் அராபத் அருங்காட்சியகத்துக்கு, பிரதமர் மோடி சென்றார். இதன்பின், பாலஸ்தீனத்திலிருந்து புறப்பட்ட மோடி, நேற்றிரவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார்.

முதல் பிரதமர்

பாலஸ்தீனத்துக்கு இதுவரை, இந்திய பிரதமர்கள் யாரும் சென்றதில்லை. ௨௦௧௫ல், அப்போதைய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி சென்றார். பிரதமர் மோடி, கடந்தாண்டு இஸ்ரேலுக்கு சென்றார். அப்போது, பாலஸ்தீனத்துக்கு அவர் செல்லவில்லை. இதனால், இந்திய - பாலஸ்தீன உறவில், விரிசல் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இம்முறை, பாலஸ்தீனத்துக்கு சென்ற மோடி, இஸ்ரேலுக்கு செல்லவில்லை. இதன் மூலம், இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும், இந்தியா சமமாகவே பார்க்கிறது என்பதை, மோடி தெளிவுப்படுத்தினார். பாலஸ்தீனத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற கவுரவமும், மோடிக்கு கிடைத்தது.


உயரிய விருது

பாலஸ்தீன நாட்டின் உயரிய, 'கிராண்ட் காலர்' விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பாலஸ்தீன அதிபர், அப்பாஸ், இதை வழங்கினார். வெளிநாட்டைச் சேர்ந்த அரசர்கள், தலைவர்கள் மற்றும் அதற்கு இணையான பதவி வகிப்போருக்கு வழங்கப்படும், உயரிய விருது இது. இதற்கு முன், சவுதி அரேபிய மன்னர் சல்மான், பஹ்ரைன் நாட்டின் மன்னர் ஹமாத், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உட்பட, பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.


பாலஸ்தீனத்திற்கு செய்யும் உதவிகள்

* 190 கோடி ரூபாயில், அதி நவீன மருத்துவமனை* 32 கோடி ரூபாயில், பெண்கள் மேம்பாட்டு மையம்* 32 கோடி ரூபாயில், தேசிய அச்சகத்துக்கு கருவிகள்* கல்வித்துறை மேம்பாட்டு நிதியுதவி

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-பிப்-201803:42:53 IST Report Abuse

அப்புஆமாம் ...2050க்குள் பாலஸ்தீனம் சுதந்திர நாடாகிவிடும்...நம்ம வங்கிக் கணக்கில் 15 லட்சமும் போட்டுருவாங்க...

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-பிப்-201803:23:30 IST Report Abuse

Mani . Vஓவர் நைட்டில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது மாதிரி ஆர்வக் கோளாறில் "நாளை முதல் பாலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிக்கப்படுகிறது" என்று அறிவித்து விடப்போகிறார்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement