எஸ்.ஐ.டி., விசாரணை தேவை: எதிர்க்கட்சிகள் கோரிக்கை Dinamalar
பதிவு செய்த நாள் :
எஸ்.ஐ.டி., விசாரணை தேவை
எதிர்க்கட்சிகள் கோரிக்கை

புதுடில்லி : 'நீதிபதி லோயா மரணம் குறித்து, எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்' என, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்திடம், காங்., தலைவர், ராகுல் தலைமையில், எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நீதிபதி லோயா மரணம்,  எஸ்ஐடி விசாரணை, காங்கிரஸ் தலைவர் ராகுல்,  Congress leader Rahul, எதிர்க்கட்சிகள் கோரிக்கை,  சிறப்பு புலனாய்வு குழு , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,president Ramnath Govind, உச்ச நீதிமன்றம்,Judge Loya death, Opposition,     Supreme Court, SIT inquiry, opposition parties demand, special intelligence Team,


குஜராத்தில் நடந்த சொராபுதீன், போலி, 'என்கவுன்டர்' வழக்கை விசாரித்து வந்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பி.எச்.லோயா, 2014, நவ., ௧ல் இறந்தார்; மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், தன் நண்பர் மகளின் திருமணத்தில் பங்கேற்க, அவர் சென்றிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

வழக்கு:
லோயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள

எதிர்க்கட்சிகள், இது பற்றி, எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என கோரி வருகின்றன. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதி, லோயா மரணம் பற்றி, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி, காங்., தலைவர், ராகுல் தலைமையில், எதிர்க்கட்சியினர், டில்லியில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்து, மனு கொடுத்தனர்.

பின், நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, லோக்சபா மற்றும் ராஜ்யசபா, எம்.பி.,க்கள், தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். சந்தேகமான முறையில், நீதிபதி ஒருவர் மரணமடைந்துள்ளார். இது குறித்து, முறையாக விசாரணை நடத்துவது, அவருக்கும், அவரதுகுடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருக்கும்.

நல்ல பதில்:


ஜனாதிபதியிடம் அளித்த மனுவில், 114 எம்.பி.,க்கள் மற்றும், 15 கட்சிகள் கையெழுத்து போட்டுள்ளனர்.

Advertisement

எங்கள் கோரிக்கை குறித்து, ஜனாதிபதி, நல்ல பதில் அளித்துள்ளார். இவ்வாறு ராகுல் கூறினார்.

காங்,, மூத்த தலைவர், கபில் சிபல் கூறியதாவது: '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அது போல், நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரிக்கவும், சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். எங்களுக்கு, சி.பி.ஐ., மற்றும், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புகள் மீது நம்பிக்கையில்லை. அதனால், சிறப்பு புலனாய்வு குழுவில், சி.பி.ஐ., மற்றும், என்.ஐ.ஏ.,வை சேர்ந்த யாரும் இடம் பெற கூடாது. சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே, உண்மை தெரிய வரும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (13+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
10-பிப்-201816:31:02 IST Report Abuse

balஅதே மாதிரி காங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஸ்ரீலங்காவுக்கு தமிழர்களை கொலை செய்ய உதவியதற்கு. பின்னர் 1984 பல்லாயிரம் படுகொலை செய்ய துணை நின்றதுக்கு. பின்னர் மற்றவர்கள் பற்றி பேச காங்கிரஸ் முயற்சி செய்யலாம்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
10-பிப்-201815:46:43 IST Report Abuse

Endrum Indianஅவரை கொன்றவர்கள் முஸ்லீம் காங்கிரஸ் சொல்படி என்று கொளுத்திப்போட்டா உடனே இந்த எஸ்.ஐ.டி. விசாரணை உடனே வாபஸ் பெறப்படும். ஏனென்றால் அவர்கள் தான் தீவிரவாதிகளுக்கு துணை செல்பவர்கள், ஆகவே சோராபுதீன் இந்திய நாட்டின் விடுதலைக்காக இடைவிடாது உழைத்த தியாகச்செம்மல் கொலை வழக்கு என்று பல வருட காலமாக சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். ஆமா மத்தியில் ஆட்சி செய்தது யாரு? அந்த வழக்கு போட்டு அதன் தீர்ப்பு என்ன? பிறகு எதற்கு கூப்பாடு.

Rate this:
10-பிப்-201807:26:51 IST Report Abuse

JShanmugaSundaramகான் கிராஸுக்கு இந்தியநாட்டின் மீதும் இந்தியமக்கள்மீதும் நம்பிக்கைவராது ஏன்என்றால் எல்லோரும் பிஜேபிக்கே ஓட்டுபோட்டதால் இனிநடக்கும் தேர்தலில் காங்கிரஸ் ஆலும் மாநிலங்கள் மேலும் இத்தாலியில் உள்ளவர்கள் ஓட்டுபோடுவரை போராடுவோம் இப்படிக்கு கான்கிராஸ் இடதுசாரிகள் எதிர்கக்ஷிகள் நல்லாவருவீங்க இங்கேதமிழ்நாடு குட்டி பாக்கிஸ்தன் ஆப்கானிஸ்தானாகமாற்றாமவிடமாட்டீங்க

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
10-பிப்-201807:22:02 IST Report Abuse

தங்கை ராஜாஇப்போதைக்கு ஒன்றும் நடக்க போவதில்லை. இன்னும் ஒரு வருடம் கழித்து பார்க்கலாம். அப்போதும் கூட பழைய மாதிரியான ஆர் எஸ் எஸ்ஸை கண்டு தொடை நடுங்கும் ஐ மு கூட்டணி ஆட்சி போல இல்லாமல் மோசடிகளின் முகத்திரை கிழிக்கும் ஆட்சியாக அமைந்தால் நீதி கிடைக்க வாய்ப்புள்ளது.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201807:21:35 IST Report Abuse

Kasimani Baskaran"'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது" - அது என்ன கிழித்தது என்று சொல்லமுடியுமா?

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-பிப்-201807:14:44 IST Report Abuse

ஆரூர் ரங்இவங்களுக்குப்பிடித்த நீதிபதின்னா சீனாவிலிருந்தோ இத்தாலியிலிருந்தோ இருந்தான் ஒப்புக்குவாங்க .

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
10-பிப்-201810:16:33 IST Report Abuse

Agni Shivaபக்கியை ஏன் இங்கு தவிர்த்து விட்டீர்கள்?...

Rate this:
Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
10-பிப்-201807:05:02 IST Report Abuse

Modikumarஇந்த RSSகாரர்கள்தான் சோனியாவை ஹிந்து மத விரோதி என்று தூற்றுவதாகவும், அவர் அம்பிகையின் அடுத்த அவதாரம் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருந்தனர் காங்கிரஸ்காரர்கள். இப்போது முன்னாள் ஜனாதிபதியின் புத்தகம் வெளியாகியுள்ளது. THE COALITION YEARS என்பதே அது. பிரணாப் முகர்ஜி உண்மையை, மனதில் பட்டதை ஒளிக்காமல், மறைக்காமல் முகத்தில் அடித்தாற்போல பேசக்கூடியவர். அவர் கூறுகிறார், சோனியா காந்தி ஹிந்து மதத்துக்கு எதிரானவர் என்று. காங்கிரஸ் அரசு கிருஸ்தவ மிஷனரிகளும், முஸ்லீம் பயங்கரவாதிகளும் தலைவிரித்து ஆடினார்கள். இது அத்தனையும் சோனியாவின் ஆசியுடன்தான் நடந்தது என்று போட்டு உடைக்கிறார். “யார் பிரதமராவது என்று கடும் பரிவர்த்தனைகள் நடந்துகொண்டிருந்தது. அரசியல் அனுபவமும், நிர்வாகம் பற்றிய சிந்தனையும் இருக்கவேண்டும் என்று தீர்மானமாக நம்பினார்கள். கடைசியில் சோனியா, மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தார். அவரும் ஏற்றுக்கொண்டார்" என்கிறார். "பலர் நான் அரசில் சேரமாட்டேன் என்று எண்ணினார்கள். காரணம் மன்மோகன் சிங் நான் நிதி மந்திரியாக இருந்தபோது என்னுடைய ஜுனியராக இருந்தார். ஆனால், சோனியா கேட்டுக்கொண்டதால் சேர்ந்தேன்" என்கிறார். ஹிந்துக்கள் எப்படியெல்லாம் தாக்கப்பட்டார்கள் என்று நினைவு கூர்கிறார். ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே நவம்பர் 2004இல் சங்கராச்சார்யர் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை பொய் வழக்கில், தீபாவளி சமயத்தில் கைது செய்தார்கள். அந்த நேரத்தில் அவர் யாத்திரைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். கைதானபோது, அவர் சாட்சியை கலைக்க முயன்றார், ஆபாசப்படம் வைத்திருந்தார் போன்ற பொய் வழக்குகளை அவர் மீது புனைந்தார்கள். அவைகள் இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை" என்கிறார். '"இந்த கைதினால் நான் கடும் கோபமடைந்தேன். கேபினட் கூட்டத்தில் மதச்சார்பின்மை என்பது ஹிந்துக்களுக்குதானா? எந்த மாநில அரசு போலீஸாவது ரமதான் காலத்தில் குற்றம் இழைத்த ஒரு முஸ்லீம் இமாமை கைது செய்வார்களா? அந்த துணிச்சல் இருக்கிறதா என்று கேட்டேன்" என்கிறார். இதில் அவர் எழுப்பியுள்ள மிக முக்கியமான விஷயம் ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் கைதுக்கு பின்னால் இருந்தவர்கள் யார்? என்ன திட்டம்? எதற்காக அபாண்டமான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன? இன்றுவரை ஜெயலலிதாதான், இந்த கைதுக்கு பின்னால் இருந்தார் என்று நம்பப்பட்டது. ஒரு நில பேரம் சரியாக படியாததால் ஜெயலலிதா இப்படி செய்தார் என்று நம்பப்பட்டாலும், இதன் பின்புலத்தில் சோனியா இருந்தார் என்று தெளிவாகிறது. அன்றைய காலகட்டத்தில் சோனியாவும், ஜெயலலிதாவும் நல்ல நட்புடன் இருந்தார்கள். 2004 முதல் 2014 வரை ஹிந்துக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் அசிங்கப்படுத்தப்பட்டன. (இது பற்றி விரிவாக நாம் கூட ஒரு கட்டுரை எழுதினேன். நித்யானந்தாவை சிக்க வைத்தது, அமர்நாத் பனி லிங்கம் பொய் என்று கூறப்பட்டது, சபரிமலை மேல்சாந்தியை கட்டாயப்படுத்தி நிர்வாண புகைப்படம் எடுத்தது, சபரிமலை ஜெயமாலா விவகாரம், நக்மாவை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் அமைப்பில் சேர வைத்தது, திருப்பதி மலையில் இரண்டுதான் வேங்கடனுக்கு சொந்தமென்றது, COMMUNAL VIOLENCE BILL என்று பல விஷயங்கள்). ஊடகங்களுக்கு இதனால் சரியான தீனி கிடைத்தது என்பதோடு இதை வைத்து வியாபாரத்தை பல ஊடகங்கள் பெருகின என்பதையும் மறுக்க முடியாது. ஆதாரம் 1. ://indianexpress.com/article/india/when-sonia-gandhi-said-will-miss-tantrums-of-pranab-mukherjee-4901578/ 2. ://postcardhindi.com/pc723 3. ://www.firstpost.com/politics/sonia-gandhihas-a-deep-contempt-for-indians-rox

Rate this:
Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
10-பிப்-201806:57:23 IST Report Abuse

Modikumarசென்னையிலிருந்து மூவாயிரம் கிலோமீட்டர் கிழக்கே ஒரு குட்டி நாடு. அது நம் தாலுக்க அளவைவிட சிறிய நாடு. அங்கு சுதந்திரம் அடைந்த 1965 முதல் 1970 ஆண்டுகளில் அந்த மாபெரும் தலைவர் எந்த வளமும் இல்லாத சிறிய நாட்டை பாடுபட்டு முன்னேற்ற முயற்சி எடுத்து கொண்டிருந்த போது எந்த பக்கமும் நகர முடியாத படி பல முட்டு கட்டைகளை மேலே படத்தில் குழுவாக காணப்படும் இந்த மொள்ளமாரி முடிச்சி அவுக்கிகள் போல் ஒரு கூட்டம் நாட்டின் வளர்ச்சியை தடுத்து கொண்டு இருந்தது. அந்த மாபெரும் தலைவர் சில கடினமான முடிவுகளை எடுத்து ஒரே இரவில் சிலரை காணாமல் அடித்தும் சிலரை மூன்று அடி உயரம் உள்ள சிறையில் அடைத்தும் நாட்டை முன்னேற்றி இன்று உலகமே வியக்கும் அளவுக்கு நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளார். அதே போல் நம் பிரதமரும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் தீய சக்திகளை சாம்பலாக வேண்டும்.

Rate this:
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
10-பிப்-201806:08:21 IST Report Abuse

Srikanth Tamizanda..முன்னாள் பிரதமர் ராஜுவின் மரணத்தில் இன்று வரை மக்களுக்கு சந்தேகம் உள்ளது. ஒரு திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ கூட குண்டு வெடிப்பில் சாகவில்லையே? எப்படி? இந்த சதி முன்கூட்டியே தெரிந்ததால் தானே இவர்கள் யாரும் ராஜீவுடன் செல்லவில்லை. இதற்கு எஸ்.ஐ.டி. அமைத்து அந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அனைத்து மேல் மட்ட அரசியல் வாதிகளையும் தண்டித்தால் தான் ராஜீவ் காந்தியின் ஆத்மா சாந்தி அடையும். இதற்கு ஜனாதிபதியிடம் மனு கொடுப்பாறா அவர் பிள்ளை?

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-பிப்-201808:17:23 IST Report Abuse

ஆரூர் ரங்உண்மைதான் சோனியா நண்பர் குத்ரோக்கி மற்றும் சந்திரா சாமியாரை விசாரிக்கவே இல்லை அவர்களது சம்பந்தமில்லாமல் ராஜீவ் கொலை நடந்திருக்காது .இந்திரா கொலையில் கூட அப்போது அவருக்கு குடைபிடித்துச் சென்ற காங் கைத்தடி ஆர் கே தவான் மீது ஒரே ஒரு துப்பாக்கி குண்டுகூட படவில்லை அது நிச்சயம் சந்தேகத்துக்குரியது தான் .. அது ஏன் ? இந்திரா கண்முன்னே மேற்பார்வையில் நடந்த அவரது மந்திரி எல் என் மிஸ்ரா கொலையை எந்த சிறப்பு விசாரணைக்குழு விசாரித்தது ?லோக்கல் போலீஸ்தான் விசாரித்து கேஸை மூடியது...

Rate this:
kumarkv - chennai,இந்தியா
10-பிப்-201804:39:30 IST Report Abuse

kumarkvPatchai naigalin aathikam Tamil naatil adigam

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement