புதுச்சேரி: புதுச்சேரியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்புவோர் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படுத்த புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.