Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐதராபாத் சம்பவத்தை விளையாட்டாக எடுத்துக்கொண்ட தமன்னா!

09 பிப், 2018 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Tamanna-did-not-take-serious-about-Shoe-thrown

கடந்த வாரம் ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றார் தமன்னா. அப்போது, அவரது ரசிகர் ஒருவர் அவர் மீது ஷூவை கழற்றி எறிந்தார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்தார் தமன்னா. அதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தபோது, சமீபகாலமாக தமன்னா சரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை. அதனால் தான் அப்படி செய்தேன் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், தற்போது அதுகுறித்து ஒரு ஆங்கில பத்திரிகைக்கு தமன்னா பேட்டி அளித்துள்ளார். அதில், பெரும்பாலும் நடிகைகள் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செல்லும்போது மலர் கொத்துதான் தருவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் ஷூவை கொடுத்து வரவேற்றுள்ளார் என்று கூறிய தமன்னா, இந்த சம்பவம் அந்த ஸ்பாட்டில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தபோதும், பின்னர் அதை ஒரு விளையாட்டாகவே எடுத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
6 அடி உயர மாப்பிள்ளை வேண்டும் - ரகுல் பிரீத் சிங்6 அடி உயர மாப்பிள்ளை வேண்டும் - ரகுல் ... மகளுக்கு தடை போட்ட ஸ்ரீதேவி மகளுக்கு தடை போட்ட ஸ்ரீதேவி


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in