ஊத்துக்கோட்டை அருகே 50 மண் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்
2018-02-09@ 08:08:38
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே செங்கரையில் 50 மண் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குவாரிகளில் அதிக அளவில் கிராவல், சவுடு மண் எடுப்பதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.