தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு பின் அரசியல் மாற்றம் ஏற்படும்: ஸ்டாலின் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு பின்
அரசியல் மாற்றம் ஏற்படும்: ஸ்டாலின்

''அ.தி.மு.க., வில், 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு வெளிவந்ததும், தமிழக அரசியலில், அதிரடி மாற்றம் நிகழும்,'' என, தி.மு.க.,செயல் தலைவர், ஸ்டாலின் பேசினார்.சென்னை, அறிவாலயத்தில், திருப்பூர் வடக்கு, தெற்கு மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், நேற்று நடந்தது.

தி.மு.க, ஸ்டாலின் அரசியல்,Stalin Politics, எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம், தமிழக அரசியல்,Tamil Nadu Politics, சென்னை அறிவாலயம்,Chennai Arivalayam,  ஜாதி பிரச்னை, தி.மு.க நிர்வாகிகள் புகார் , DMK,  MLA,   Caste Problem, DMK Executives Complaint,


அதில் பங்கேற்ற, நிர்வாகிகள் பேசியதாவது:கட்சியில் மேல் மட்டம் முதல், கீழ்மட்டம் வரை, ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு ஆதரவாகவே நிர்வாகிகளும், தொண்டர்களும் செயல்படுகின்றனர்.

கட்சியின் நலனுக்கு முக்கியத்துவம் தராமல், குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களுக்கு, கட்சி பதவிகள் வழங்கப்படுகின்றன.

அதனால் தான், தி.மு.க., தோல்வி முகத்தை சந்தித்து வருகிறது. ஜாதி பிரச்னையை சரிசெய்யவில்லை என்றால், அதிருப்தி அடைகிற தி.மு.க.,வினர், தினகரன் அணிக்கு செல்லும் நிலை ஏற்படும்.அதை சரிசெய்யும் விதமாக, சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகளிர் அணியினருக்கு, அனைத்து தேர்தல்களிலும், 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மகளிருக்கு முக்கியத்துவம் அளித்தால், தி.மு.க., ஓட்டு வங்கி அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

பின், ஸ்டாலின் பேசியதாவது:மாவட்ட அளவில் நிலவும் கோஷ்டி பூசலுக்கு, முடிவு கட்டப்படும். உங்கள் புகார் கடிதங்களை விசாரிக்க, மாவட்டத்திற்கு, ஒரு குழு அனுப்பி வைக்கப்படும்.

Advertisement

அக்குழு விசாரணை நடத்தி, உண்மை நிலவரத்தை தெரிவித்த பின், கட்சி நலனுக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மகளிர் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அ.தி.மு.க.,வில், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவந்ததும், தமிழக அரசியலில், அதிரடி மாற்றம் நிகழும். இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
09-பிப்-201813:26:26 IST Report Abuse

Anandஎப்போதுமே குறுக்கு வழி, குறுக்கு புத்திதானா?

Rate this:
sri - mumbai,இந்தியா
09-பிப்-201812:01:23 IST Report Abuse

sriஇலவு காத்த கிளி என்றால் அது நம் தளபதிதான் . சரி ஏதோ தி மு கவில் மாற்றம் கொண்டு வந்து மக்கள் மனதில் இடம் பிடித்து ஆட்சியைப் பிடிப்பார் என்று பார்த்தால் இவர் அடுத்தவன் குடி கெட்டால் நமக்கு தானே லாபம் , மக்களுக்கு நம்மை விட்டால் வேற கதி ஏது என்று சிந்தித்து கிடக்கிறார் . இந்த எண்ண ஓட்டம் தான் இவருக்கு ஆர் கே நகரில் கேடாய் விளைந்தது. டெபொசிட்டே போச்சு . இவர் ஆனால் திருந்த மறுக்கிறார் . மாற்றி யோசிக்கவும் முடியாமால் தவிக்கிறார். செயலற்ற தலைவர். தி மு காவிற்கு எதிர் காலம் சூன்யம்

Rate this:
09-பிப்-201811:31:39 IST Report Abuse

GovindarajanThenkondarதீர்ப்பு 2022 ல் வந்தால்??

Rate this:
Kabilan E - Chennai,இந்தியா
09-பிப்-201810:40:42 IST Report Abuse

Kabilan Eஅரசியலில் சுடலைக்கு பெரிய ஏமாற்றமே காத்து இருக்கு...

Rate this:
P. SIV GOWRI - Chennai,இந்தியா
09-பிப்-201809:35:28 IST Report Abuse

P. SIV GOWRIகேட்டு கேட்டு புளிச்சு போச்சு

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-பிப்-201808:48:22 IST Report Abuse

Srinivasan Kannaiyaபாவம் கிளி பிள்ளையா சொன்னதையே சொல்லி கொண்டு இருக்கிறார்... ஆஹா அவர் முதல் அமைச்சர் ஆசை நிறைவேறுமா...? இல்லை கனவாகி போகுமா...

Rate this:
Rajinikanth - Chennai,இந்தியா
09-பிப்-201808:45:01 IST Report Abuse

Rajinikanthஅரசியல் மாற்றம் ஏற்படும் ..ஆனா..அப்போவாவது..நீங்க முதல்வர் ஆக முடியுமா அண்ணா ...?அது என்னமோ தெரியல ...நீங்க கனவு காணும் போது எல்லாம் எவனாவது புதுசு புதுசா உள்ளே புகுந்து குட்டையா கொழப்பிடுறானுவோ ...இப்பவும் பாருங்களேன் ..உங்களமாதிரியே ..இந்த ரஜினியும் கமலும் கனவு காண்றதை ...போச்சா...ஒட்டு பிரிஞ்சு மறுபடியும் எடுபிடியோ அல்லது கெடுபிடியோ ...குக்கரோ அல்லது தொப்பியோ ..உங்களை மெர்சல் ஆக்குவானுங்க பாருங்க ....

Rate this:
raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ
09-பிப்-201808:30:36 IST Report Abuse

raguraman venkatஎனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. தி.மு.க. நண்பர்கள் தெளிவு படுத்த வேண்டுகிறேன். அண்ணாவும் பெரியாரும் சமத்துவமும் சமூக நீதியும் உண்டாக வேண்டும் என்றுதானே இந்த இயக்கத்தை தோற்றுவித்து இவ்வளவு பாடுபட்டர்கள். கருணாநிதியும் சாதி சமயமில்லாத சமூகத்தை ஏற்படுத்தியதில் திராவிட இயக்கத்தின் பங்கை பேச்சுக்கு பேச்சு சொல்லுவார். இப்போது கழக உறுப்பினர்களே சாதி குற்றம் சாட்டுகிறீர்களே. அப்போ கருணாநிதி பொய் சொல்கிறாரா? அண்ணாவும் பெரியாரும் இயக்கத்தை ஆரம்பித்ததில் உண்மையான நோக்கம் நிறைவேறவில்லையா? நீங்கள் மதவாத கட்சி என்று சொல்லும் பிஜேபிக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?

Rate this:
sridhar - Chennai,இந்தியா
09-பிப்-201809:54:04 IST Report Abuse

sridharகருணாநிதி பொய் சொல்வது இப்போது தான் தெரியுதா. திக , திமுக , சிரியார், கோழைமணி , புண்ணாக்குதொரை எல்லாமே கேவலமான புளுகர்கள்....

Rate this:
anand - Chennai,இந்தியா
09-பிப்-201811:59:47 IST Report Abuse

anand50 ஆண்டுகள் ஆண்ட இவர்கள் நினைத்து இருந்தால் ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்கி இருக்க முடியாதா? ஜாதி எதிர்ப்பு என்று சொல்லி ஜாதியை வளர்த்து தான் இருக்கிறார்கள்...அதை விட இவர்கள் குடும்பங்கள் மிகவும் வளமாக இருக்கின்றன...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-பிப்-201807:05:14 IST Report Abuse

ஆரூர் ரங்//குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களுக்கு, கட்சி பதவிகள் வழங்கப்படுகின்றன// உங்க கொள்கை மட்டுமென்ன ? விருதுநகரில் முக்குலத்தோருக்கும் ஆண்டிபட்டியில் நாடாருக்கும் எம் எல் ஏ சீட் கொடுத்ததுண்டா ?? அட மக்கள் தொகையில் நான்கு சதவீதமிருக்கும் பார்ப்பனர்களுக்கு எப்போதாவது பஞ்சாயத்து கவுன்சிலர் சீட்டாவது கொடுத்ததுண்டா? சாதிபார்த்துத் தானே எம்பி எம் எல் ஏ டிக்கெட்? ஆனால் உங்கள் குடும்ப வக்கீல் ஆடிட்டர் டாக்டர் தேவைக்கு மட்டும் ஆரியர் தானே வேண்டும்? அதற்குமட்டும் ஆரியரல்லாதோரில் தகுதியுளளவர்களில்லையா? ?

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
09-பிப்-201806:57:14 IST Report Abuse

கைப்புள்ளபொதுவாகவே இப்போ இரண்டு கழகங்களும் மிரண்டு போயிதான் கிடக்கின்றன. அவர்களுடைய அடித்தளமே ஆட்டம் கண்டு போயி கிடக்கிறது. பல முனைகளில் இருந்தும் ரிவிட்டுகள் அடிக்க படுகின்றன. ஜெ வின் மறைவு, 2017 ஆகியவை கழகங்களின் அழிவு ஆரம்பமான காலமாக கணக்கிடபடுகிறது.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement